கிருமித் தொற்று பரவும் பயமின்றி போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்

கிருமித் தொற்று பரவும் பயமின்றி போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்

2 mins read
39872a3a-e3af-4da0-b6d9-0a12a1df95bc
முகக்கவசங்கள், சமூக இடைவெளி எதையும் பின்பற்றாமல் பாந்த்ரா ரயில் நிலையம் அருகே சாலைகளில் கூடி போராட்டம் நடத்திய வெளிமாநிலத் தொழிலாளா்கள். படம்: ஏஎஃப்பி -

மும்பை: மும்பை பாந்த்ரா ரயில் நிலை­யத்­துக்கு அருகே உள்ள சாலை­யில் திரண்டு நின்று ஆயி­ரக் கணக்­கான வெளி­மா­நி­லத் தொழி­லா­ளா்­கள் போராட்­டம் நடத்­தி­னர்.

கொரோனா கிரு­மித் தொற்று பரவிவிடுமோ என்ற எந்த ஒரு பய­மும் இல்­லா­மல், முகக்­க­வ­சம், சமூக இடை­வெளி பற்றி கவ­லைப் படா­மல் உரக்க முழக்­க­மிட்­ட­னர்.

"எங்­க­ளுக்கு வயி­ராற உணவு போட­வேண்­டாம், எங்­களை சொந்த ஊருக்கு போகச் சொன்­னால் அதுவே போதும்," என்று அவர்­கள் கோரிக்கை விடுத்­தனா்.

தேசிய ஊட­ரங்கு மே 3ஆம் தேதி வரை நீட்­டிக்­கப்­படும் என்று பிர­தமா் நரேந்­திர மோடி அறி­வித்த தைத் தொடா்ந்து வெளி­மா­நி­லத் தொழி­லா­ளா்­கள் இந்த போராட்­டத்தை நடத்­தி­யுள்­ள­னர்.

அவர்­கள் எல்­லாம் பீகார், உத்­த­ரப்­பி­ர­தே­சத்தை சேர்ந்த தொழி­லா­ளர்­கள் எனக் கூறப்­ப­டு­கிறது.

"எங்­க­ளுக்கு வேலை­யும் இல்லை, உண­வும் இல்லை. உட­ன­டி­யாக ரயிலை இயக்­குங்­கள், எங்­களை சொந்த ஊர்­க­ளுக்கு அனுப்­புங்­கள்," எனக் கூறி போராட்­டத்­தில் இறங்­கி­னர்.

கொரோனா சமூ­கப்­ப­ர­வ­லா­ கா­மல் இருப்­ப­தற்­குத்­தான் இந்த ஊர­டங்கு உத்­த­ரவு நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில் முகக் கவ­சங்­கள், சமூக இடை­வெளி எதை­யும் பின்­பற்­றா­மல் மக்­கள் சாலை­களில் கூடி­யது மகா­ராஷ்­டிரா அர­சுக்கு பெரும்­சங்­க­டத்தை ஏற்­ப­டுத்­தி­யது.

தொழி­லா­ளர்­கள் சிலர் கூறு கையில், "தன்­னார்­வ­லர்­களும் தொண்டு நிறு­வ­னங்­களும் எங்க ளுக்கு உண­வு­களை வழங்குகிறார்­கள். ஊர­டங்கு உத்­த­ரவு கார­ண­மாக எங்­கள் வாழ்­வா­தா­ரம் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. நாங்­கள் எங்­கள் சொந்த ஊர்க ளுக்­குத் திரும்ப விரும்­பு­கி­றோம். எங்­க­ளுக்கு உணவு வேண்­டாம். நாங்­கள் எங்­கள் சொந்த ஊர்­க­ளுக்­குத் திரும்ப வழி கூறுங்­கள். ஊர­டங்கு உத்­த­ரவை நீட்­டித்­த­தில் எங்­க­ளுக்கு மகிழ்ச்சி இல்லை. எங்­க­ளு­டைய சேமிப்­பு­கள் அரசு அறி­வித்த 21 நாள் ஊர­டங்கு நாட்­க­ளி­லேயே காலி­யா­கி­விட்­டன. சாப்­பி­டு­வ­தற்குக் கூட வழி­யில்லை. நாங்­கள் எங்­கள் சொந்த ஊருக்­குத் திரும்ப அர­சாங்­கம் அதற்­கான வச­தியை செய்­து­தர வேண்­டும்," என்­ற­னர்.

இைதத்­தொ­டர்ந்து அவா்க­ளது தேவை­கள் நிறை­வேற்­றப்­படும் என்று அர­சுத் தரப்­பில் வாக்­கு­றுதி அளித்தனர். இதை­ய­டுத்து ஒரு பகு­தி­யினா் கலைந்து சென்­றனா்.

கலைந்து செல்­லா­த­வா்­கள் மீது போலி­சார் தடி­யடி நடத்தி விரட்­டினா். இதுதொடா்பான காெணாளி சமூக வலைத்­த­ளங்­களில் பர­வி யது. இந்­தப் பிரச்சினை தொடா்பாக மகா­ராஷ்­டிர முதல்வா் உத்­தவ் தாக்­க­ரே­வு­டன் மத்­திய உள்­துறை அமைச்சா் அமித் ஷா தொலை­பே­சி­யில் பேசினாா்.

இதேபோல், குஜ­ராத் மாநி­லம் சூரத் நக­ரில் நூற்­றுக்­க­ணக்­கான வெளி­மா­நி­லத் தொழி­லா­ளா்­கள் தங்­களை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைக்கக்கோரி போராட்­டத்­தில் ஈடு­பட்­டனா்.