புதுடெல்லி: கொரோனா கிருமியை எதிர்த்துப் போராட மத்திய, மாநில அரசுகளுக்கு ரூ.155 கோடி நிதி அளித்துள்ள தொழிலதிபர் ராதாகிஷன் தமானியைப் பாராட்டியுள்ள மோடி 'ஒருங்கிணைந்து கொரோனாவை வெல்வோம்' என டுவிட் செய்துள்ளார்.
அவென்யூ பல்பொருள் அங்காடி களின் நிறுவனர் ராதாகிஷன் தமானி, பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.100 கோடியும் மாநில அரசுகளுக்கு ரூ.55 கோடியும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சைகளுக்காக நிதி வழங்கினார்.
இதில் மஹாராஷ்டிரா, குஜராத்திற்கு ரூ.10 கோடி, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களுக்கு தலா ரூ.5 கோடி, தமிழகம், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் மாநிலங்களுக்கு தலா ரூ.2.5 கோடி நிதி வழங்கியுள்ளார்.
இதுகுறித்து தமானி வெளி யிட்டுள்ள அறிக்கையில் 'பொது மக்களைப் பாதுகாக்க மத்திய, மாநில, உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொண்ட விரைவான நடவடிக்கைகளுக்கு நாங்கள் முழுமையாக ஆதரவளிக்கிறோம். நம் சமூகத்தையும் சக மனிதர்களையும் பாதுகாக்க நாம் ஒவ்வொருவரும் நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்," என கூறினார்.
பிரைட் ஸ்டார் முதலீடு நிறுவனம் மூலம் இந்த நிதியுதவியை தமானி வழங்கியுள்ளார்.
இந்திய பணக்காரர்களில் தமானியின் சொத்து மதிப்பு மட்டும் தான் கொரோனா கிருமி நெருக்கடிகளுக்கு இடையிலும் 5% உயர்வைக் கண்டுள்ளன. மக்கள் அனைவரும் ஊரடங்கு காரணமாக பேரங்காடிகளில் அதிகளவில் பொருட்களை வாங்கியதால் இந்த உயர்வை கண்டுள்ளார்.

