மகாராஷ்டிரா, டெல்லி, தமிழகத்தில் அதிகம்

மகாராஷ்டிரா, டெல்லி, தமிழகத்தில் அதிகம்

2 mins read
c85538db-8b0d-4ac8-accc-d4d4926200f1
மும்பையில் வெளி மாநில ஊழியர்கள் மும்பையின் புறநகர்ப்பகுதியில் ஒரு பாலத்திற்குக் கீழ் ஒன்றாக அமர்ந்து தங்களது திறன்பேசியில் திரைப்படம் பார்க்கின்றனர். படம்: ஏஎப்பி -

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கொவிட்-19 எனும் கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 12,380ஆக அதி­கரித்­துள்­ளது. நேற்று முன்­தி­னம் ஒரே நாளில் 37 பேர் உயி­ரி­ழக்க, மர­ணம் அடைந்­தோர் எண்­ணிக்­கை­யும் 414ஆக உயர்ந்­தது.

ஆக அதி­க­மாக பாதிக்­கப்­பட்டு இருப்­பது மகா­ராஷ்­டிர மாநி­லம்­தான். அங்கு மட்­டும் இது­வரை 3,398 பேரைக் கிருமி தொற்­றி­விட்டது. அவர்­களில் 187 பேர் உயிரிழந்துவிட்டனர்.

அதற்கு அடுத்­த­ப­டி­யாக டெல்­லி­யில் 1,650 பேரும் தமி­ழ­கத்­தில் 1,374 பேரும் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக மத்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்து இருக்­கிறது.

கிரு­மித்­தொற்­றுக் கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கை­களில் கேரள மாநி­லம் முன்­ன­ணி­யில் இருக்­கிறது. அங்கு இது­வரை 609 பேர் பாதிக்­கப்­பட்ட நிலை­யில், அவர்­களில் 218 பேர் குண­ம­டைந்­து­விட்­ட­னர். நேற்று முன்­தி­னம் புதி­தாக ஒரு­வரை மட்­டுமே கிருமி தொற்­றி­யது.

இத­னி­டையே, கொரோனா கிருமி பர­வா­மல் கட்­டுப்­ப­டுத்த வேண்­டு­மெ­னில் சோத­னை­க­ளின் எண்­ணிக்­கை­யைக் குறிப்­பி­டத்­தக்க அளவு உயர்த்த வேண்­டும் என்று இந்­திய சுகா­தார நிபு­ணர்­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர்.

இந்­திய மருத்­துவ ஆய்­வுக் கழ­கம் சேக­ரித்த தர­வு­க­ளின்­படி, நேற்று முன்­தி­னம் வரை 244,893 பேருக்­குக் கிரு­மித்­தொற்­றுப் பரி­சோ­த­னை­கள் நடத்­தப்­பட்­டுள்­ளன.

மொத்­தம் 130 கோடி மக்­கள் தொகை­யைக் கொண்ட நாடாக இருக்­கும்­போது இந்த எண்­ணிக்கை மிக­வும் குறைவு என நிபு­ணர்­க­ள் கரு­து­கின்­ற­னர்.

இது­வரை 30,000த்திற்­கும் மேற்­பட்ட உயிர்­களை இழந்­துள்ள அமெ­ரிக்­கா­வில் இது­வரை 3,100,387 சோத­னை­கள் நடத்­தப்­பட்­டுள்­ள­தாக கொரோனா கிரு­மித்­தொற்­றுப் பாதிப்பு, சோத­னை­கள் குறித்த தர­வு­க­ளைத் திரட்­டி­வ­ரும் 'வோர்ல்­டோ­மீட்­டர்ஸ். இன்ஃபோ' இணை­யத்­த­ளம் தெரி­வித்­துள்­ளது. அதா­வது, அங்கு ஒரு மில்­லி­யன் பேருக்கு 9,387 என்ற விகி­தத்­தில் கிரு­மித்­தொற்­றுச் சோத­னை­கள் நடத்­தப்­பட்­டுள்­ளன. மாறாக, இந்­தி­யா­வில் ஒரு மில்­லி­யன் பேருக்கு 177 சோத­னை­களே நடத்­தப்­பட்­டு உள்­ளன.

இதற்­கி­டையே, இந்­தி­யா­விற்­குக் கைகொ­டுக்­கும் நோக்­கில் 650,000 பரி­சோ­த­னைக் கரு­வி­கள் ஏற்­றப் பட்ட விமா­னம் நேற்­றுக் காலை குவோங்சோ விமான நிலை­யத்­திலிருந்து கிளம்­பி­விட்­ட­தாக சீனாவிற்கான இந்தியத் தூதர் விக்ரம் மிஸ்ரி தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.