ரூ.50,000 கோடி: இந்திய மத்திய வங்கி கடனுதவி

ரூ.50,000 கோடி: இந்திய மத்திய வங்கி கடனுதவி

2 mins read
79cb0221-58a3-4593-a730-5be83b93762a
இந்­தி­யா­வில் கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக பொரு­ளி­யல் படு­மோ­ச­மா­கப் பாதிக்­கப்­பட்டு இருப்­ப­தால் அந்த நாட்­டின் மத்­திய வங்கி இரண்­டா­வது முயற்­சி­யாக ரூ. 50,000 கோடி கடன் ஏற்­பாட்டை அறி­வித்து இருக்­கிறது. படம்: இபிஏ -

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக பொரு­ளி­யல் படு­மோ­ச­மா­கப் பாதிக்­கப்­பட்டு இருப்­ப­தால் அந்த நாட்­டின் மத்­திய வங்கி இரண்­டா­வது முயற்­சி­யாக ரூ. 50,000 கோடி கடன் ஏற்­பாட்டை அறி­வித்து இருக்­கிறது.

அந்த ஏற்­பாட்­டின் மூலம் சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் பலன் அடை­யும் என்று பிர­த­மர் நரேந்­திர மோடி நேற்று தெரி­வித்­தார். கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக இந்­தியா மே 3ஆம் தேதி வரை முடங்கி இருக்கிறது. அந்த நாட்­டின் பொரு­ளி­யல் எல்லா துறை­க­ளி­லும் பாதிக்­கப்­பட்டு உள்­ளது.

இந்­நி­லை­யில், பிர­த­மர் மோடி­யும் நிதி அமைச்­சர் நிர்­மலா சீதா­ரா­ம­னும் வியா­ழக்­கி­ழமை சந்­தித்து பேசி­னார்­கள்.

அத­னை­ய­டுத்து மத்­திய வங்­கி­யின் ஆளு­நர் சக்தி காந்­த­தாஸ், நேற்று மும்பை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னார்.

அப்­போது அவர் பல விவ­ரங்­க­ளைத் தெரி­வித்­து அறிவிப்புகளை விடுத்தார்.

பணப்­பு­ழக்­கம் தாரா­ள­மாக இருப்­பதை உறு­திப்­ப­டுத்த வங்­கி­க­ளுக்கு ரூ. 50,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்­கப்­படும் என்­றும் அவர் குறிப்பிட்டார்.

வங்­கி­கள் தாரா­ள­மாக கடன் கொடுக்க வேண்­டும் என்று அறி­வு­றுத்­தப்­பட்டு உள்­ள­தா­க­வும் அவர் கூறி­னார்.

கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக இந்­தி­யப் பொரு­ளி­யல் இந்த ஆண்டு 1.9 விழுக்­கா­டு­தான் வள­ரும் என்று அனைத்­து­லக பண நிதி­யம் கணித்து உள்­ள­தைச் சுட்­டிக்­காட்­டிய அவர், ஜி20 நாடு­க­ளி­லேயே இந்த வளர்ச்­சி­தான் அதி­கம் என்­றார்.

என்­றா­லும் அடுத்த ஆண்டு பொரு­ளி­யல் 7.4 விழுக்­காடு வள­ரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக அவர் கூறி­னார்.

இவ்­வே­ளை­யில், வங்­கி­க­ளி­டம் இருந்து மத்­திய வங்கி வாங்­கும் பணத்­திற்கு கொடுக்­கப்­படும் வட்டி விகி­தம் 4%லிருந்து 3.75% ஆகக் குறைக்­கப்­ப­டு­வ­தா­க­வும் ஆளு­நர் சக்தி காந்­த­தாஸ் தெரி­வித்­தார்.

கொரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டு உள்ள பாதிப்புகளைச் சீர் செய்வதற்காக மாநில அரசுகள் கூடுதலாகக் கடன் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

மாநிலங்களுக்கு 60% கூடுதலாக நிதி உதவி கிடைக்கும் என்ற சக்தி காந்ததாஸ் அதாவது அவசர தேவைகளுக்கு மத்திய வங்கியிடம் இருந்து மாநில அரசுகள் 60% வரை கூடுதல் கடன் பெறலாம் என்று விளக்கினார்.

இப்போதைய இக்கட்டான சூழலிலும் வங்கிகள் வழக்கம்போல் இயங்குவதை மத்திய வங்கி உறுதி செய்துள்ளதாகக் கூறிய அவர், நாட்டுக்கு மிகப்பெரிய பொருளியல் சவால் காத்திருக்கிறது என்றும் நாட்டின் நிலையை மத்திய வங்கி உன்னிப்பாக கவனித்து வருகிறது என்றும் தெரிவித்தார்.