மணமுடிக்க 850 கி.மீ. சைக்கிள் ஓட்டியவர் தனிமைப்படுத்தப்பட்டார்

1 mins read

லக்னோ: பஞ்சாப் மாநிலத்தில் பணிபுரிந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது சோனு குமார் சவுகான், ஏப்ரல் 15ஆம் தேதி நடக்கவிருந்த தனது திருமணத்தில் கலந்துகொள்வதற்காக 850 கி.மீ. தொலைவில் உள்ள தனது சொந்த ஊருக்கு ஒரு வாரம் சைக்கிளில் பயணம் செய்தார். இன்னும் 150 கி.மீ. கடந்தால் வீட்டுக்குப் போய்விடலாம். ஆனால் அதற்குள் அவரை உ.பி. அதிகாரிகள் பிடித்து கொரோனா தனிமைப் பகுதியில் அடைத்துவிட்டனர்.