தீவிரமடையும் கிருமித்தொற்று: 4 நகரங்களுக்கு எச்சரிக்கை

தீவிரமடையும் கிருமித்தொற்று: 4 நகரங்களுக்கு எச்சரிக்கை

2 mins read
23f81ebe-9b8d-4886-b4c3-6ef94f4d33ba
கேரளாவில் வெறிச்சோடி காணப்படும் கடைத்தெருவில் ஓய்வெடுக்கும் ஆடவர். படம்: ஊடகம் -

புது­டெல்லி: மும்பை, இந்­தூர், கோல்­கத்தா, ஜெய்ப்­பூர் ஆகிய நான்கு நக­ரங்­களில் கொரோனா கிரு­மித் தொற்று மிக­வும் தீவி­ர­ம­டைந்­துள்­ள­தாக மத்­திய அரசு எச்­ச­ரித்­துள்­ளது.

ஊர­டங்கு உத்­த­ரவு விதி­மு­றை­களை தளர்த்­து­வது, வன்­மு­றை­கள் உள்­ளிட்ட கார­ணங்­க­ளால் கிருமித்­தொற்­றுப் பர­வல் அதி­க­ரிக்­கும் என மத்­திய உள்­துறை அமைச்சு சுட்­டிக்­காட்டி உள்­ளது.

இது தொடர்­பாக சம்­பந்­தப்­பட்ட மாநி­லங்­க­ளுக்கு மத்­திய உள்­துறை அமைச்சு அனுப்­பிய கடி­தத்­தில் இவ்­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

"நாட்­டின் சில பகு­தி­களில் சுகா­தா­ரப் பணி­யா­ளர்­கள், மருத்­து­வர்­கள் மீது தாக்­கு­தல் நடந்­துள்­ளது. சமூக இடை­வெ­ளியை அறவே கடை­பி­டிக்­காத சில பகு­தி­களும் உள்­ளன. பல்­வேறு வன்­மு­றைச் சம்­ப­வங்­கள் நிகழ்ந்­துள்­ளன.

"நக­ரப்­பு­றங்­களில் வாக­னங்­கள் இயக்­கப்­ப­டு­கின்­றன. இவை அனைத்­தும் தடுத்து நிறுத்­தப்­பட வேண்­டும்," என உள்­துறை அமைச்சு மாநில அர­சு­க­ளுக்கு அறி­வு­றுத்தி உள்­ளது.

நாடு முழு­வ­தும் கொரோனா கிரு­மித் ளதொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 17,265ஆக­வும் உயி­ரி­ழந்­தோர் எண்­ணிக்கை 543ஆக­வும் அதி­க­ரித்­துள்­ளது.

'கொவிட்-19' நோய்த்­தொற்று தீவிர நிலையை எட்­டி­யி­ருப்­ப­தாக கரு­தப்­படும் நான்கு நக­ரங்­க­ளி­லும் ஊர­டங்கு உத்­த­ரவை முழு­மை­யாக அமல்­ப­டுத்த வேண்­டும் என்று மத்­திய அரசு வலி­யு­றுத்தி உள்­ளது.

மகா­ரா­‌ஷ்­டி­ரா­வில் மும்பை மட்­டு­மல்­லா­மல் புனே நக­ரி­லும் நோய்த்­தொற்று தீவி­ர­ம­டைந்து வரு­வ­தாக கூறப்­ப­டு­கிறது. மகா­ரா­‌ஷ்­டி­ரா­வில் 4,203 பேர் கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். 223 பேர் பலி­யாகி உள்­ள­னர்.

ஜெய்ப்­பூரை உள்­ள­டக்­கிய ராஜஸ்­தான் மாநி­லத்­தில் 1,478 பேர் பாதிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், பலி எண்­ணிக்கை 14ஆக உள்­ளது.

கொரோனா கிரு­மித் தொற்­றால் 12 பேர் உயி­ரி­ழந்­துள்ள மேற்கு வங்க மாநி­லத்­தில், கோல்­கத்தா மட்­டு­மல்­லா­மல் ஹவுரா, கிழக்கு மெடி­னி­பூர், டார்­ஜி­லிங், கலிங்­போங் உள்­ளிட்ட மேலும் சில நக­ரங்­க­ளி­லும் கிரு­மித் தொற்று தீவி­ர­ம­டைந்­துள்­ள­தாக சுகா­தார அமைச்சு சுட்­டிக்­காட்டி உள்­ளது.

இந்­தூர் நகரை உள்­ள­டக்­கிய மத்­திய பிர­தே­சத்­தில் 1,407 பேர் கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்டு 70 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

இதை­ய­டுத்து கிரு­மித் தொற்று தீவி­ர­ம­டைந்­துள்ள நக­ரங்­களில் உட­ன­டி­யாக கள ஆய்வு மேற்­கொள்­ளப்­படும் என்­றும் இதற்­காக அமைக்­கப்­பட்­டுள்ள சிறப்பு குழுக்­கள் இந்த ஆய்வை மேற்­கொள்­ளும் என்­றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.