போலிசாருக்கு குளிர்பானம் வழங்கிய பெண்மணி: 'சல்யூட்' அடித்து பாராட்டிய டிஐஜி

போலிசாருக்கு குளிர்பானம் வழங்கிய பெண்மணி: 'சல்யூட்' அடித்து பாராட்டிய டிஐஜி

2 mins read
f22bec58-b09e-48bb-b045-9f13c7164be2
சல்யூட் அடித்து பாராட்டும் காவல்துறை தலைவர். படம்: ஊடகம் -

அமராவதி: ஆந்திராவில் ஊரடங்கின் போது பணியில் இருக்கும் காவலர்களுக்கு குளிர்பானம் வழங்கிய பெண்ணுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

தென்மாநிலங்களில் அண்மைய சில தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் பணியில் ஈடுபட்டிருக்கும் போலிசாருக்கு லோகமணி என்ற ஒரு பெண்பணி குளிர்பானங்கள் வழங்கும் காணொளிப் பதிவு ஒன்று அண்மையில் சமூக வலைத்தளங்களில் பலரால் பகிரப்பட்டது.

அந்த பெண்மணியிடம் போலிசார் பேசும் போது தனது மொத்த வருமானம் 3 ஆயிரம் ரூபாய் மட்டுமே என்றும் கிருமித் தொற்றில் இருந்து மக்களைக் காப்பாற்றும் காவல்துறையினரை பாதுகாக்க வேண்டியது மக்களின் பொறுப்பு என்றும் அவர் கூறுவது அந்த காணொளியில் பதிவாகி உள்ளது.

இதைக் கண்ட பல­ரும் அப்­பெண்­ம­ணிக்கு பாராட்டு தெரி­வித்­த­னர்.

மனி­தா­பி­மா­னத்­து­ட­னும் சமூக பொறுப்­பு­ணர்­வு­ட­னும் லோக­மணி செயல்­பட்­டுள்­ள­தாக பல முக்­கிய பிர­மு­கர்­களும் தெரி­வித்­துள்­ள­னர். இதே போன்று அனை­வ­ரும் நாட்­டின் நலன் கருதி செயல்­பட வேண்­டும் என்­றும் பலர் குறிப்­பிட்­டுள்­ள­னர்.

இந்­நி­லை­யில் ஆந்­திர மாநில காவல்­துறை தலை­வர் கவு­தம் ஸ்வாங் நேற்று முன்­தி­னம் லோக­ம­ணியை காணொளி அழைப்பு மூல­மாக தொடர்பு கொண்டு பாராட்­டி­ய­து­டன் 'சல்­யூட்' அடித்­தும் தமது மரி­யா­தையை பதிவு செய்­தார்.

"உங்­க­ளைப் போன்ற மக்­களை காப்­பாற்­றவே காவல்­துறை இரவு பக­லாக பாடு­ப­டு­கிறது. காணொ­ளி­யில் உங்­க­ளது செய­லைக் கண்டு நெகிழ்ந்து போனேன்," என்று கவு­தம் ஸ்வாங் குறிப்­பிட்­டார்.

இதை­ய­டுத்து அவ­ரு­டன் இருந்த மற்ற அதி­கா­ரி­களும் லோக­ம­ணிக்கு 'சல்­யூட்' அடித்து தங்­க­ளது பாராட்­டு­களை தெரி­வித்­த­னர்.

லோகமணி காவலர்களுக்கு குளிர்பானம் வழங்குவது நீடித்து வருகிறது.