பனாஜி: நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கோவாவில் கொரோனா பாதிப்பு முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இங்கு இம்மாதம் 3ஆம் தேதியிலிருந்து புதிதாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இங்கு மொத்தம் ஏழு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் அனைவரும் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். இதையடுத்து கொ ரோனா கிருமி இல்லாத மாநிலம் என்ற பெருமையை கோவா பெற்று உள்ளது.
இதுகுறித்து மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தனது டுவிட்டர் பதிவில், "கோவா முழுவதுமாக கொரோனா பாதிப்பிலிருந்து வெளியே வந்துவிட்டது. இதற்காக தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் கடுமையாக உழைத்த மருத்துவர்கள், தாதியர், களப்பணியாளர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்து சுகாதாரத்துறை பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த 3ஆம் தேதியில் இருந்து இங்கு யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை," என்று தெரிவித்துள்ளார்.

