நாடு முடங்கியதால் கிருமி எண்ணிக்கையில் சரிவு

நாடு முடங்கியதால் கிருமி எண்ணிக்கையில் சரிவு

1 mins read
3338b5fd-48bc-4ff7-ba4c-3cb051b803f3
கர்நாடகாவில் வழங்கப்படும் இலவச அரிசி, பருப்பு போன்ற பொருட்களை பெறுவதற்காகக் காத்திருக்கின்றனர் இந்தப் பெண்மணிகள். படம்: ஏஎப்பி/ மஞ்சுநாத் கிரண் -

புதுடெல்லி: இந்­தி­யா­வில் கொரோனா கிரு­மித்­தொற்று எண்­ணிக்கை அதி­க­ரித்த வண்­ணம் உள்ள நிலை­யில் நாட­ளா­விய முடக்­க­நிலை 27வது நாளைத் தொட்­டுள்­ளது. சுகா­தார அமைச்­சின் ஆக அண்­மைய விவ­ரங்­களின்­படி இந்­தியா முழு­வ­தும் பதி­வாகி உள்ள கொவிட்-19 கிரு­மித்­தொற்று எண்­ணிக்கை 18,601. மர­ண­ம­டைந்­தோர் எண்­ணிக்கை 590. அதே­நே­ரம் மருத்­து­வ­ம­னை­களில் இருந்து குண­ம­டைந்து வீடு திரும்­பி­யோர் எண்­ணிக்கை 3,251.

கிரு­மித்­தொற்று எண்­ணிக்கை இரட்­டிப்­பாகி வரு­வது குறித்த ஒரு தக­வ­லை­யும் அமைச்சு நேற்று முன்­தி­னம் வெளி­யிட்­டது.

முன்­னர் 3.4 நாட்­களில் இரட்­டிப்­பாகி வந்த எண்­ணிக்கை முடக்­கம் நடப்­புக்கு வந்த பிறகு 7.5 நாட்­களில் இரட்­டிப்பு கண்டு வரு­வ­தாக அது தெரி­வித்­தது.

இது ஒரு நல்ல முன்­னேற்­றம் என்று குறிப்­பிட்ட மத்­திய சுகா­தார, குடும்ப விவ­கார அமைச்­சின் இணைச் செய­லா­ளர் லாவ் அகர்­வால், 18 மாநி­லங்­களும் யூனி­யன் பிர­தே­சங்­களும் இந்த இரட்­டிப்பு நிலை­யைக் காட்­டி­லும் முன்­னே­று­வ­தா­கத் தெரி­வித்­தார்.

ஏப்­ரல் 20ஆம் தேதி முதல் சில விதி­வி­லக்­கு­களை அர­சாங்­கம் அறி­வித்­த­போ­தி­லும் கிரு­மித்­தொற்று அதி­கம் பர­வும் பகு­தி­க­ளுக்கு அந்த விதி­வி­லக்­கு­கள் பொருந்­தாது என்­றும் அத்­த­கைய இடங்­களில் கடு­மை­யான கட்­டுப்­பாடுகள் தொட­ரும் என்­றும் குறிப்­பிட்­டது.