இந்தியாவில் இன்று (ஏப்ரல் 22) காலை 8 மணி நிலவரப்படி 19,984 பேரை கொவிட்-19 கிருமி தொற்றிவிட்டது. அவர்களில் 640 பேர் உயிரிழந்துவிட்டனர்.
இந்நிலையில், கிருமித்தொற்றுக் குழுமங்களாக அறிவிக்கப்பட்டுள்ள அல்லது கட்டுப்பாட்டுப் பகுதிகளைச் சேர்ந்த கர்ப்பிணிகள் பிரசவத்திற்குச் சென்றால் அவர்களுக்குக் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் அறிவித்துள்ளது.
அவர்களிடம் கிருமி தொற்றியதற்கான அறிகுறி எதுவும் இல்லையெனினும் அவர்கள் கண்டிப்பாக கொரோனா சோதனைக்குட்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 60 விழுக்காட்டினரிடம் அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்று மருத்துவ ஆய்வுக் கழக நோய்த்தொற்றியல் பிரிவுத் தலைவர் டாக்டர் ஆர் ஆர் கங்காகேத்கர் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரிலும் உலக அளவிலுமான அண்மைய கொவிட்-19 செய்திகளுக்கு எங்களுடைய பிரத்தியேக செய்திப் பக்கத்தை நாடுங்கள்: www.tamilmurasu.com.sg/coronavirus