கணவரின் ஆசையை நிறைவேற்ற மருத்துவர் மனைவி கோரிக்கை

கணவரின் ஆசையை நிறைவேற்ற மருத்துவர் மனைவி கோரிக்கை

1 mins read
56d8b8f9-7ea3-4a9b-8a46-5858ec0af733
கொரோனா கிரு­மித் தொற்­றால் உயி­ரி­ழந்த சென்னை மருத்­து­வர் சைம­னின் மனைவி ஆனந்தி தமது கண­வ­ரின் உடலை தங்கள் சமூக வழக்கப்படி அடக்­கம் செய்ய உதவ வேண்­டும் என முதல்­வர் பழ­னி­சா­மிக்கு கோரிக்கை விடுத்­துள்­ளார். படம்: ஊடகம் -

சென்னை: கொரோனா கிரு­மித் தொற்­றால் உயி­ரி­ழந்த சென்னை மருத்­து­வர் சைம­னின் மனைவி ஆனந்தி தமது கண­வ­ரின் உடலை தங்கள் சமூக வழக்கப்படி அடக்­கம் செய்ய உதவ வேண்­டும் என முதல்­வர் பழ­னி­சா­மிக்கு கோரிக்கை விடுத்­துள்­ளார்.

இது தொடர்­பாக கண்­ணீர் மல்க வெளி­யிட்ட காணொ­ளிப் பதிவில், சில கார­ணங்­க­ளுக்­காக தமது கணவரின் உடல் சவப்­பெட்­டி­யில் வைத்து வேறொரு இடு­காட்­டில் அடக்­கம் செய்­யப்­பட்­டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மருத்­து­வர் சைம­னின் உட­லைப் புதைக்க கல்­ல­றைக்குக் கொண்டு சென்­ற­போது எதிர்ப்­பு­கள் எழுந்­தன. உட­லைப் புதைக்கவிடா­மல் அப்­ப­கு­தி­யில் வசிக்­கும் பொதுமக்­களில் சிலர் தாக்­கு­தல் நடத்­தி­னர்.

இந்­நி­லை­யில் அவ­ரது மனைவி வெளி­யிட்ட காணொ­ளிப் பதி­வில் இரண்டு பிள்­ளை­க­ளு­டன் வித­வை­யாக நிற்­கும் நிலை­யில், தமி­ழக முதல்­வர் தமக்கு உதவ வேண்­டும் என கேட்­டுக்கொண்­டுள்­ளார்.

"என் கண­வ­ருக்கு செயற்கை சுவா­சம் அளிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்பு என்­னி­ட­மும் பிள்­ளை­க­ளி­ட­மும் பேசி­னார். அப்­போது, 'ஒரு­வேளை நான் திரும்பி வர­வில்லை என்­றால் நம் வழக்­கப்­படி அடக்­கம் செய்­யுங்­கள்' என்று கேட்­டுக்­கொண்­டார்.

"­எனது கணவரின் உடல் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டியை அப்­ப­டியே எடுத்து எங்­கள் வழக்­கப்­படி எங்­கள் இடு­காட்­டில் அடக்­கம் செய்ய உதவ வேண்­டும். இத­னால் யாருக்­கும் எவ்­வி­தத் தொற்­றும் பர­வாது," என ஆனந்தி சைமன் கண்­ணீர் மல்க கோரிக்கை விடுத்­துள்­ளார்.