இந்தியாவிற்குப் பணம் அனுப்புவது 23% குறையும்

இந்தியாவிற்குப் பணம் அனுப்புவது 23% குறையும்

1 mins read

புது­டெல்லி: கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக இவ்­வாண்டு வெளி­நா­டு­களில் இருந்து இந்­தி­யா­விற்­குப் பணம் அனுப்­பு­வது 23% குறை­ய­லாம் என உலக வங்கி கணித்­தி­ருக்­கிறது.

கடந்த 2019ஆம் ஆண்­டில் வெளி­நா­டு­களில் இருந்து 83 பில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் இந்­தி­யா­விற்கு அனுப்­பப்­பட்ட நிலை­யில் இந்த ஆண்­டில் அது 64 பி. அமெ­ரிக்க டால­ரா­கக் குறை­யக்­கூ­டும் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

வள­ரும் நாடு­க­ளைப் பொறுத்­த­மட்­டில், வெளி­நா­டு­களில் இருந்து வரும் பணம் முக்­கிய வரு­மான ஆதா­ர­மா­கத் திகழ்ந்து வரு­கிறது என்று உலக வங்­கிக் குழு­மத்­தின் தலை­வர் டேவிட் மல்­பாஸ் குறிப்­பிட்­டார்.

வெளி­நா­டு­களில் இருந்து தங்­க­ளது குடும்ப உறுப்­பி­னர்­கள் அனுப்­பும் பணத்தை நம்­பியே ஏரா­ள­மான குடும்­பங்­கள் உணவு, சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு மற்றும் அடிப்­ப­டைத் தேவை­க­ளுக்­கான செல­வு­க­ளைச் சமா­ளித்து வரு­வதா­க­வும் அவர் சொன்­னார்.

அத்­து­டன், இவ்­வாண்­டில் பணம் அனுப்­பு­வது உல­க­ள­வி­லும் கிட்­டத்­தட்ட 20% குறை­யக்­கூ­டும் என்று உலக வங்கி கூறி­யுள்­ளது.