நாடு முழுவதும் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 28,000ஐக் கடந்துள்ளது.
இதற்கிடையே இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்று பரவல் வேகம் குறைந்துள்ளது.
கிருமித் தொற்றுப் பரவலின் அன்றாட பரவல் விகிதம் தற்போது 6 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
டெல்லியில் நேற்று (ஏப்ரல் 25) நடைபெற்ற மத்திய அமைச்சர்கள் குழுவின் 13ஆவது கூட்டத்துக்குப் பிறகு இத்தகவல் வெளியானது.
கொரோனா கிருமித் தொற்றால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் 3.1 விழுக்காடாக உள்ளது என்றும் குணமடைவோர் விகிதாச்சாரம் 20 விழுக்காட்டுக்கும் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100ஐ கடந்த பிறகு முதன்முறையாக நேற்றுதான் நோய்த் தொற்று பரவல் விகிதம் மிகக் குறைவான அளவில் 6% ஆக பதிவானது.

