'தமிழகத்தில் சென்னையில்தான் கொவிட்-19 அதிகம்; 34 வயது ஆடவர் உயிரிழப்பு'

தமிழகத்தில் கொரோனா கிருமித்தொற்றில் இருந்து குணமடைவோர் அளவு 52% ஆகக் கூடி இருக்கிறது என்றும் இதை கொரோனா கிருமித்தொற்று நிலவரம் அறியும் மத்திய குழு பாராட்டி இருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

“கொரோனா கிருமி தொற்றி இருப்பதாகக் கண்டறியப்பட்டவர்களில் 100ல் 41 பேர் குணமடைந்து வந்தனர். இப்போது அந்த அளவு 52% ஆகக் கூடி இருக்கிறது. மொத்தம் 960 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். குணமடைவோர் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது,” என்று அமைச்சர் விளக்கினார்.

மாநிலத்தில் இன்று (ஏப்ரல் 26) காலை 8 மணி நிலவரப்படி மொத்தம் 1,821 பேர் கிருமித்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு இருந்தனர். மரண எண்ணிக்கை 23 ஆக இருந்தது.

இந்நிலையில், சென்னையில்தான் தொற்று அதிகமாக இருக்கிறது என்று கூறிய அமைச்சர், சனிக்கிழமை அந்நகரில் புதிதாக 43 பேர் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

சென்னையில் சனிக்கிழமை 34 வயதுள்ள ஆடவர் ஒருவர் மரணம் அடைந்துவிட்டார். இதுவரை கொரோனாவுக்குப் பலியாகி இருப்போரில் இவருக்குத்தான் வயது மிகவும் குறைவு என்பதால் அவரது உடலைப் பரிசோதிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!