தரமற்ற கருவிகள்; விசாரணைக்குத் தயார்: சீன நிறுவனங்கள் அறிவிப்பு

தரமற்ற கருவிகள்; விசாரணைக்குத் தயார்: சீன நிறுவனங்கள் அறிவிப்பு

1 mins read
16a76ab4-044c-42ec-9412-e184841ebea6
பெங்களூரில் உள்ள சி.வி.ராமன் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று சுகாதாரச் சோதனை செய்யப்படுகிறது. படம்: ஏஎப்பி/மஞ்சுநாத் -

புது­டெல்லி: இந்­தி­யா­வுக்கு ஏற்­று­மதி செய்­யப்­பட்ட துரித சோத­னைக் கரு­வி­கள் தர­மா­னவை என சீன நிறு­வ­னங்­கள் தெரி­வித்­துள்­ளன.

இது­தொ­டர்­பாக இந்­தி­ய தரப்பில் மேற்­கொள்­ளப்­படும் விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைக்­கத் தயார் என அந்­நி­று­­வனங்­கள் அறி­வித்­துள்­ளன.

இந்­தி­யா­வி­லும் கொரோனா கிரு­மித் தொற்று வேக­மாகப் பரவி வரு­கிறது. இதை­ய­டுத்து அதிக எண்­ணிக்­கை­யில் கிரு­மித் தொற்றுப் பரி­சோ­தனை நடத்த மத்­திய, மாநில அர­சு­கள் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றன.

இதற்­காக முதற்­கட்ட சோத­னைக்கு உத­வக்­கூ­டிய 'ரேப்­பிட் டெஸ்ட் கிட்' என்று அழைக்­கப்­படும் துரித சோத­னைக் கரு­வி­களை சீனா­வி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­துள்­ளது இந்­தியா. இது­வரை ஐந்­தரை லட்­சம் கரு­வி­கள் வந்து சேர்ந்­துள்­ளன. சீனா­வைச் சேர்ந்த இரு நிறு­வ­னங்­கள் இவற்றை இந்­தி­யா­வுக்கு அனுப்பி உள்­ளன.

இந்­நி­லை­யில் இக்­க­ரு­வி­கள் துல்­லி­ய­மா­கச் செயல்­ப­ட­வில்லை எனப் பர­வ­லா­கப் புகார் எழுந்­தது. எனவே இவற்­றைப் பயன்­ப­டுத்த வேண்­டாம் என இந்­திய மருத்­துவ ஆராய்ச்­சிக் கவுன்­சில் மாநில அர­சு­க­ளுக்கு அறி­வு­றுத்தி உள்­ளது.

ஆனால் 70க்கும் மேற்­பட்ட நாடு­க­ளுக்­குத் துரித சோத­னைக் கரு­வி­களை ஏற்­ற­மதி செய்­துள்­ள­தா­க­வும் தங்­கள் தயா­ரிப்பை உரிய முறை­யில் மதிப்­பிட்டு இந்­திய மருத்­துவ ஆராய்ச்­சிக் கவுன்­சில் ஏற்­றுக் கொண்­ட­தா­க­வும் சீன நிறு­வ­னங்­கள் தெரி­வித்­துள்­ளன.

தங்­கள் தயா­ரிப்பு தொடர்­பாக எழுந்­துள்ள புகார்­கள் அதிர்ச்சி அளிப்­ப­தா­க­வும் இது தொடர்­பான விசா­ர­ணையை எதிர்­கொள்­ளத் தயார் என்­றும் அந்நிறுவனங்கள் அறி­வித்­துள்­ளன.