'கிருமிநாசினி தயாரிக்க அரிசியைப் பயன்படுத்துவது அறிவுக்குப் பொருந்தாத செயல்'

1 mins read
ce48a66e-82d7-4dee-9e5b-367b84eca16a
கிருமி நாசினி தயாரிக்க அரிசியைப் பயன்படுத்துவது மனிதத்தன்மையற்றது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. படம்: ஏஎப்பி -

புதுடெல்லி: ஊரடங்கால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்களும் அமைப்பு சாரா தொழிலாளர்களும் ஏழைகளும் சொல்லொணா துயரங்களைச் சந்தித்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கிருமி நாசினி தயாரிக்க அரிசியைப் பயன்படுத்துவது மனிதத்தன்மையற்றது என்று அக்கட்சியின் மேலிடக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"பெட்ரோலில் கலப்பதற்கான எத்தனாலைத் தயாரிக்கவும் கிருமி நாசினி தயாரிப்பதற்காகவும் கையிருப்பில் உள்ள அரிசியைப் பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய அரசின் இம்முடிவானது உணவு கிடைக்காமல் பட்டினியின் விளிம்பில் உள்ள மக்களின் கன்னத்தில் அறைவது போல் அமைந்துள்ளது," என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

இருப்பு வைக்­கப்­பட்ட அரி­சியை ஏழை­க­ளுக்கு இல­வ­ச­மாக வழங்­க­வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­யுள்ள அக்­கட்சி, பல­முறை வலி­யு­றுத்­தி­யும் மத்­திய அரசு இக்­கோ­ரிக்­கைக்கு செவி­சாய்க்­க­வில்லை எனக் கூறி­யுள்­ளது.

பட்­டி­னி­யோ­டும் தங்­கு­மி­டம் இல்­லா­ம­லும் மக்­கள் போராடி வரு­வ­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அக்­கட்சி, கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­கள் லாபம் சம்­பா­திக்க அரி­சியை மடை­மாற்­றம் செய்­வதை அனு­ம­திக்க முடி­யாது என்­றும் இது ஒரு குற்­றச்­செ­யல் என்­றும் தெரி­வித்­துள்­ளது.

"உணவு தானி­யம் என்­பது மக்­க­ளுக்­குத்­தானே தவிர எரி­பொ­ரு­ளுக்கு அல்ல.

"அதி­லும் அனைத்­து­லகச் சந்­தை­யில் கச்சா எண்ணெய் விலை வர­லாறு காணாத வீழ்ச்­சியை சந்­தித்­துள்ள நிலை­யில், பெட்­ரோ­லில் ஓடும் வாக­னங்­கள் ஊர­டங்­கால் ஓடாத நிலை­யில், பெட்­ரோ­லில் கலக்­கப்­படும் எத்­த­னா­லை தயா­ரிக்க மதிப்புமிக்க அரி­சி­யைப் பயன்­ப­டுத்­து­வது அறி­வுக்­குப் பொருந்­தா­தது," என மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்சி­ தெரி­வித்­துள்­ளது.