'லட்சக்கணக்கானோர் வறுமையில் தள்ளப்படுவர்'

'லட்சக்கணக்கானோர் வறுமையில் தள்ளப்படுவர்'

1 mins read
f33049d4-009d-4700-b05f-be5ce5887ab4
நெருக்­கடி தொடர்ந்­தால் மற்­றும் ஊர­டங்கு விரை­வில் நீக்­கப்­ப­டா­விட்­டால் நாட்­டில் லட்­சக்­க­ணக்­கான மக்கள் வறு­மை­யில் தள்­ளப்­ப­டு­வார்­கள் என்­ப­தும் உண்மை என நிகழ்ச்சி ஒன்­றில் பேசும்­போது ரிசர்வ் வங்கி முன்­னாள் ஆளு­நர் துவ்­வூரி சுப்­பா­ராவ் குறிப்­பிட்­டார். படம்: இபிஏ -

புது­டெல்லி: உல­க­ள­வில் ஏற்­பட்­டுள்ள நெருக்­க­டிக்கு மத்­தி­யில் மற்ற உலக நாடு­களைவிட இந்­தியா சிறப்­பாக செயல்­ப­டப் போகிறது என்­பது உண்­மை­தான் என ரிசர்வ் வங்கி முன்­னாள் ஆளு­நர் துவ்­வூரி சுப்­பா­ராவ் தெரி­வித்­துள்­ளார்.

நெருக்­கடி தொடர்ந்­தால் மற்­றும் ஊர­டங்கு விரை­வில் நீக்­கப்­ப­டா­விட்­டால் நாட்­டில் லட்­சக்­க­ணக்­கான மக்கள் வறு­மை­யில் தள்­ளப்­ப­டு­வார்­கள் என்­ப­தும் உண்மை என நிகழ்ச்சி ஒன்­றில் பேசும்­போது அவர் குறிப்­பிட்­டார்.

"கொரோனா கிரு­மித்­தொற்று நெருக்­கடி முடிந்­த­தும் இந்­தி­யா­வில் சில பொரு­ளா­தார மாற்­றங்­கள் வேக­மாக இருக்­கும். ஏனென்­றால் பெரும்­பா­லான ஆய்­வா­ளர்­கள் இந்த ஆண்டு உண்­மை­யில் பொரு­ளா­தா­ரம் எதிர்­ம­றை­யான வளர்ச்­சி­யைக் கொண்­டி­ருக்­கும் அல்­லது வளர்ச்சி சுருங்­கி­வி­டும் என்று நம்­பு­கி­றார்­கள்.

"இரண்டு மாதங்­க­ளுக்கு முன்பு ஏற்­பட்ட நெருக்­க­டிக்கு முன்­ன­தா­கவே இந்­தி­யா­வின் பொரு­ளா­தார வளர்ச்சி குறைந்­து­விட்­டது என்­பதை நாம் நினை­வில் கொள்ள வேண்­டும்," என்­றார் சுப்­பா­ராவ்.

நாட்­டில் எந்த மூல­த­ன­மும் அழிக்­கப்­ப­ட­வில்லை என்­றும் தொழிற்­சாலை­கள் இருக்­கின்­றன என்­றும் சுட்­டிக்­காட்­டிய அவர், ஊர­டங்கு நீக்­கப்­பட்­ட­வு­டன் இந்­திய மக்­கள் வேலை செய்­யத் தயா­ராக உள்­ளனர் என்­றார்.