அமராவதி: ஆந்திர மாநில ஆளுநர் பிஸ்வபூஜன் ஹரிசந்தனுக்கு மிக விரைவில் கொரோனா கிருமித் தொற்றுக்கான சோதனை செய்யப்பட உள்ளது.
ஆளுநர் மாளிகையின் ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
ஆளுநர் மாளிகையின் முதன்மைப் பாதுகாப்பு அதிகாரி, தாதியர் ஒருவர், சமையல் கலைஞர் மற்றும் வீட்டுப் பணியாளர் ஆகிய நால்வரே கொவிட் 19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் நான்கு பேரும் வெளிநாடு எதற்கும் பயணம் மேற்கொள்ளவில்லை. ஏற்கெனவே கிருமித் தொற்று இருப்பவர்களுடன் நேரடித் தொடர்பும் கொண்டிருக்கவில்லை. எனவே, இவர்களுக்கு எப்படி நோய்த்தொற்று ஏற்பட்டது என்பது குறித்து குழப்பம் நிலவுகிறது.
முதன்மைப் பாதுகாப்பு அதிகாரி மட்டும் சில வாரங்களுக்கு முன்பு ஹைதராபாத் சென்று வந்துள்ளார் என்று ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பயணத்தின்போது அவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. தற்போது அவரும் தனிமைப்படுத்தப்பட்டு உரிய சிகிச்சை பெற்று வருகிறார்.

