புதுடெல்லி: கொரோனா கிருமிக்கு எதிராகப் போராடும் பிரதமர் மோடியைக் கௌரவப்படுத்தும் வகையில் 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் அவரது ஓவியத்தை வரைந்திருந்தார். தீபா எனும் ஆசிரியர் தனது மாணவி ஸ்வேதா என்பவர் வரைந்த மோடியின் பென்சில் ஓவியத்தை (படம்) டுவிட்டரில் பகிர்ந்திருந்தார். அதில் "தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம் ஒரு பென்சில் ஸ்கெட்ச் மூலம் பிரதமருக்கு நன்றி தெரிவிக்க என்னைத் தூண்டியது," என தனது மாணவி கூறியதை பதிவிட்டு, மோடியை அடையும் வரை அவர் பகிரச் சொல்லி கேட்டுக்கொண்டதாகவும் பதிவிட்டிருந்தார். "அவரது இந்த அன்பான மற்றும் புதுமையான செயலுக்கு ஸ்வேதாவுக்கு நன்றி தெரிவி யுங்கள். அவரது மதிப்புமிக்க வாழ்த்துகள்தான் மகத்தான வலிமையின் ஆதாரம்" என மோடி நன்றி தெரிவித்து பதிலுக்கு டுவிட் செய்து மாணவியை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
ஓவியத்தை வரைந்த பள்ளி மாணவிக்கு மோடி நன்றி
1 mins read
கொரோனா கிருமிக்கு எதிராகப் போராடும் பிரதமர் மோடியைக் கௌரவப்படுத்தும் வகையில் 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் அவரது ஓவியத்தை வரைந்திருந்தார். தீபா எனும் ஆசிரியர் தனது மாணவி ஸ்வேதா என்பவர் வரைந்த மோடியின் பென்சில் ஓவியத்தை (படம்) டுவிட்டரில் பகிர்ந்திருந்தார்.படம்: ஊடகம் -

