புதுச்சேரி: துணை நிலை ஆளுநர் கிரண்பேடியின் தலையீட்டால் ஒரு அமைச்சராக தமது விருப்பம்போல் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை என புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் குற்றம்சாட்டி உள்ளார்.
ஒரு அமைச்சராக எதையும் செய்யமுடியாமல் இருப்பதால் தான் வகித்துவரும் அமைச்சர் பதவியிலிருந்து விலகிவிட முடிவு செய்துள்ளதாகவும் இதற்கு ஒரு எம்எல்ஏவாக இருந்துவிட்டுப் போகலாம் என்றும் கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் கிருஷ்ணாராவ் நேற்று பேசுகையில், "கிரண்பேடி சொல்வதையே அதிகாரிகள் செவி மடுக்கிறார்கள். அரசின் முடிவுகளை ஒருவரும் செயல்படுத்துவது இல்லை.
"வெளிமாநிலங்களில் தங்கிப் பணிபுரிந்த 16 பேர் நடைபயணமாக புதுச்சேரியில் உள்ள தங்கள் சொந்த ஊரான ஏனாம் மாவட்டத்திற்கு வந்தனர். இந்த 16 பேரையும் ஊருக்குள் அனுமதிக்கக்கூடாது என அதிகாரிகளுக்குக் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.
"அவர்கள் எங்கிருந்து வந்தார் களோ அங்கேயே திருப்பி அனுப்பும்படி கோதாவரி மாவட்ட ஆட்சியருக்கு கிரண்பேடி தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
"இது கிரண்பேடியின் பழிவாங்கும் நடவடிக்கையைக் காட்டுகிறது. ஏனாம் பகுதியைச் சேர்ந்தவர்களை 24 மணிநேரத்தில் உள்ளே வர கிரண்பேடி அனுமதிக்காவிட்டால் எனது அமைச்சர் பதவியை விட்டு விலகுவேன்," என்று கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.

