ஒரே நாளில் 5,609 பேருக்கு கிருமித்தொற்று

ஒரே நாளில் 5,609 பேருக்கு கிருமித்தொற்று

1 mins read
d64ab5aa-e521-41d6-9e18-8dbbcbd1adab
மும்பையில் வேலை பார்த்து வந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதற்காக மகாரா‌ஷ்டிர மாநிலத்தின் மும்பை பொரிவாலி ரயில் நிலையத்தில் கூடியிருக்கின்றனர். படம்: இஎஃப்இ - திவ்யகாந்த் சோலங்கி -

புது­டெல்லி: கொரோனா கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை ஒரு லட்­சத்து 12 ஆயி­ரத்தை எட்­டி­யுள்­ள­தாக இந்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

நேற்று முன்­தி­னம் ஒரே நாளில் 5,609 பேருக்கு கிரு­மித்­தொற்று இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. ஒரே நாளில் இத்­தனை சம்­ப­வங்­கள் பதி­வா­குவது இது இரண்­டா­வது முறை.

தற்­போது 63,624 பேர் கொரோனா கிரு­மித் தொற்­றுக்­காக சிகிச்சை பெற்று வரு­வ­தா­க­வும் நோயா­ளி­களில் இது­வரை 45,299 பேர் குண­ம­டைந்­துள்­ள­தா­க­வும் நேற்று காலை 8 மணி­ய­ள­வில் சுகா­தார அமைச்சு அறி­வித்­தது.

நாடு முழு­வ­தும் கொவிட்-19 நோயால் இறந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை 3,435 என்­றும் அமைச்சு உறுதி செய்­தது.

இதற்­கி­டையே இந்­தி­யா­வில் கொவிட்-19 நோயில் இருந்து குண­ம­டைந்­தோர் விகி­தம் 40 விழுக்­கா­டாக அதி­க­ரித்­துள்­ளது.

கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் 7 விழுக்­காட்­டி­ன­ருக்­கும் குறை­வா­ன­வர்­க­ளுக்கே மருத்­து­வ­மனை சிகிச்சை தேவைப்­ப­டு­வ­தாக மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.

நாட்­டி­லேயே மிக அதி­க­மாக மகா­ராஷ்­டி­ரா­வில் சுமார் 40 ஆயி­ரம் பேரும், குஜ­ராத்­தில் 12,537 பேரும் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

டெல்­லி­யில் 11,088 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர் என சுகா­தார அமைச்­சின் அறிக்கை தெரி­விக்­கிறது.

இதற்­கி­டையே, ஆந்­தி­ரா­வில் நேற்று பேருந்து போக்­கு­வ­ரத்து தொடங்­கி­யது. எனி­னும் சிறு­வர்­க­ளுக்­கும் 65 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­க­ளுக்கும் பேருந்­தில் செல்ல அனு­மதி இல்லை என அம்­மா­நில அரசு அறி­வித்­துள்­ளது.

இதையடுத்து அங்கு இயல்பு வாழ்க்கை திரும்புகிறது.