மும்பைக்கு அழைத்து வரப்பட்ட 1,972 இந்தியர்கள்

மும்பைக்கு அழைத்து வரப்பட்ட 1,972 இந்தியர்கள்

1 mins read
7847eee9-6f35-4f22-a277-b6d48f208ff5
10 நாடு­களில் தவித்த 1,972 இந்­தி­யர்­கள் 13 சிறப்பு விமா­னங்­களில் மும்பைக்கு அழைத்து வரப்­பட்­ட­தாக மகாரா‌ஷ்டிர மாநிலத்தின் முதல்வர் உத்தவ் தாக்கரே குறிப்­பிட்­டுள்­ளார். கோப்புப்படம்: இணையம் -

மும்பை: ஊர­டங்­கின் போது சிங்­கப்­பூ­ரில் இருந்து 243 பேர் மும்­பைக்கு அழைத்து வரப்­பட்­ட­தாக மகா­ராஷ்­டிர முதல்­வர் உத்­தவ் தாக்­கரே தெரி­வித்­துள்­ளார்.

இது தொடர்­பாக வெளி­யிட்ட அறிக்­கை­யில், 10 நாடு­களில் தவித்த 1,972 இந்­தி­யர்­கள் 13 சிறப்பு விமா­னங்­களில் மும்பை அழைத்து வரப்­பட்­ட­தாக அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"லண்­ட­னில் இருந்து 653 பேரும், மணி­லா­வில் இருந்து 150, சான் பிரான்­சிஸ்கோ மற்­றும் டாக்­கா­வில் இருந்து தலா 107, நியூ­யார்க்­கில் இருந்து 208, கோலா­லம்­பூ­ரில் இருந்து 201, சிகா­கோ­வில் இருந்து 195, குவைத்­தில் இருந்து 2, அடிஸ்­அ­ப­பா­வில் இருந்து 78, காபூ­லில் இருந்து 12, மஸ்­கட்­டில் இருந்து 16 பேரும் அழைத்து வரப்­பட்­டுள்­ள­னர்.

வெளி­நா­டு­களில் இருந்து அழைத்து வரப்­பட்­ட­வர்­களில் 822 பேர் மும்­பையைச் சேர்ந்­த­வர்­கள் என்று குறிப்­பிட்ட அவர், 1,025 பேர் மராட்­டி­யத்­தின் பிற பகு­தி­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் என்­றும், 125 பேர் பிற மாநி­லங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் என்­றும் தெரி­வித்­தார்.

வெளி­நா­டு­களில் தவிக்­கும் இந்­தி­யர்­களை மும்­பைக்கு அழைத்து வர மேலும் 27 விமா­னங்­கள் இயக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக அவர் கூறி­யுள்­ளார்.

மும்பை மற்­றும் பிற மாநி­லங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் மும்­பை­யில் உள்ள தங்­கு­வி­டு­தி­க­ளி­ல் தனிமைப்படுத்தப்பட்டதாக முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.