கோல்கத்தா: கொரோனா கிருமித்தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக முடங்கிப் போய் இருந்த மேற்கு வங்காளத்தைச் சில நாட்களுக்கு முன் அம்பன் புயல் சீரழித்துவிட்டது.
புயல் அடித்து மூன்று நாட்கள் ஆகிவிட்டாலும் அரசாங்கம் போதிய வேகத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவில்லை என்று கூறி கோல்கத்தா நகரின் பல இடங்களிலும் நேற்று ஆயிரக் கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மரங்களை அகற்றுவது, மின்சாரத்தை வழங்குவது, குடிநீர் போன்ற வசதிகளை ஏற்படுத்தித் தருவது முதலான காரியங்களை அரசாங்கம் விரைந்து செய்யவில்லை என்று போராட்டக்காரர்கள் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று புயல் பாதித்த இடங்களைச் சுற்றிப் பார்த்து நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டார்.
புயல் காரணமாக மேற்கு வங்காளத்தில் 85 பேர் மாண்டுவிட்டதாகத் தெரிவித்த முதல்வர், மாநிலத்தின் இப்போதைய சிரம மான காலகட்டத்தை மனதில் கொண்டு வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்களை மே மாதம் 26ஆம் தேதி வரை மேற்கு வங்காளத்துக்கு அனுப்ப வேண்டாம் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
புயல் காரணமாக 1 டிரிலியன் ரூபாய் (S$18.5 பில்லியன்) சேதம் ஏற்பட்டு இருப்பதாகத் தெரி விக்கப்பட்டுள்ளது.