கலங்கி நிற்கும் மகாராஷ்டிரா: ஒரே நாளில் 60 பேர் மரணம்

மகாராஷ்டிராவில் கொரோனா கிருமித் தொற்றின் பிடி மேலும் இறுகி வருகிறது.

நேற்று (மே 23) ஒரே நாளில் அங்கு 60 பேர் ‘கொவிட்-19’ நோய்க்குப் பலியாகி உள்ளனர்.

பல்வேறு மாநிலங்களில் கொரோனா கிருமித் தொற்று பரவியுள்ளது. நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது மகாராஷ்டிரா.

அங்கு பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 48 ஆயிரத்தைக் கடந்துள்ளது. சனிக்கிழமை ஒரே நாளில் அங்கு புதிதாக 2,608 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதே வேளையில் இதுவரை 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்நோயில் இருந்து குணமடைந்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் மட்டும் கிருமித்தொற்றால் 1,577 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையே மாநிலத் தலைநகர் மும்பையில் உள்ள தாராவி குடிசைப் பகுதியையும் கொரோனா கிருமித்தொற்று முடக்கிப் போட்டுள்ளது. இப்பகுதியில் மட்டும் 1,500க்கும் மேற்பட்டவர்கள் ‘கொவிட்-19’ நோயால் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

நேற்று ஒரே நாளில் இந்தக் குடிசைப்பகுதியில் புதிதாக 33 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தாராவியில் மட்டும் ‘கொவிட்19’ நோய்க்கு 58 பேர் பலியாகி உள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!