கேரள அரசு: முன்னெச்சரிக்கையாக செயல்பட்டதால் உயிரிழப்பு வெகுவாக குறைந்தது

2 mins read
2d8ef9e6-a1d7-489f-9167-7c8658f0ed70
நேற்று டெல்லி விமான நிலையத்துக்கு வந்த பயணி ஒருவரது ஆவணங்களை காவலர் பாதுகாப்புக் கூண்டில் இருந்தவாறு சரிபார்க்கிறார். படம்: ஏஎஃப்பி -

திரு­வ­னந்­தபுரம்: கொரோனா கிரு­மித்­தொற்­றுப் பிரச்­சி­னையை எதிர்­கொண்டு சமா­ளிக்க கேரளா புதிய வழி­மு­றை­க­ளைக் கண்­ட­றிந்­துள்­ள­தாக அம்­மா­நில முதல்­வர் பின­ராயி விஜ­யன் தெரி­வித்­துள்­ளார்.

இவ்­வி­ஷ­யத்­தில் நாட்­டில் உள்ள பிற மாநி­லங்­க­ளுக்கு கேரளா முன்­மா­தி­ரி­யாக திகழ்­வ­தா­க­வும் நேற்று முன்­தி­னம் காணொளி வசதி மூலம் நடை­பெற்ற நிகழ்ச்சி ஒன்­றில் பேசு­கை­யில் அவர் குறிப்­பிட்­டார்.

மேலும் எத்­த­கைய நெருக்­க­டி­கள் ஏற்­பட்­டா­லும், அனைத்­தை­யும் கேரள மாநி­லம் சமா­ளிக்­கும் என்று குறிப்­பிட்ட அவர், தற்­போது 'கொவிட்-19' நோயா­ளி­க­ளாக அடை­யா­ளம் காணப்­பட்­டுள்ள பலர் கேர­ளா­வுக்கு வெளி­யில் இருந்து வந்­த­வர்­கள் எனச் சுட்­டிக்­காட்­டி­னார். அதற்­காக அவர்­களை அன்­னி­யப்­ப­டுத்­தி­விட முடி­யாது என்­றும் அவர்­க­ளுக்­கும் கேர­ளா­வில் உரிமை உள்­ளது என்­றும் முதல்­வர் பின­ராயி விஜ­யன் கூறி­னார்.

இதற்­கி­டையே கேர­ளா­வில் நோய்த்­தொற்று ஆபத்­துள்ள பகு­தி­க­ளின் எண்­ணிக்கை 55ஆக உயர்வு கண்­டுள்­ள­தாக அம்­மா­நில சுகா­தார அமைச்­சர் ஷைலஜா தெரி­வித்­துள்­ளார்.

தகுந்த முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­ட­தால் தான் கேர­ளா­வில் கிரு­மித்­தொற்று பர­வ­வில்லை என்­றும் உயி­ரி­ழப்­பு­கள் குறை­வாக இருந்­தது என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

"சீனா­வில் கொரோனா கிரு­மி­யின் தாக்­கம் தென்­பட்­ட­துமே கேர­ளா­வில் 18 நிபு­ணர் குழுக்­களை அமைத்து அக்­கி­ரு­மியை எதிர்­கொள்ள தயா­ரா­கி­விட்­டோம். ஜன­வரி 30ம் தேதி வூஹா­னில் இருந்து முதல் நோயாளி கேரளா வந்­த­டைந்­தார்.

"தொடக்­கம் முதலே நோயா­ளி­களை உட­னுக்­கு­டன் கண்­ட­றி­வது, தனி­மைப்­ப­டுத்­து­வது, அவ­ரு­டன் தொடர்­பில் இருந்­த­வர்­களை அடை­யா­ளம் காண்­பது ஆகிய நட­வ­டிக்­கை­களை கச்­சி­த­மாக மேற்­கொண்­ட­தால் தான் கேர­ளா­வில் உயி­ரி­ழப்பு விகி­தம் ஆகக் குறை­வாக உள்­ளது.

"இங்­கி­லாந்து தூத­ரக ஊழி­யர்­கள் பாதிக்­கப்­பட்ட போது அவர்­களை தனி­யார் மருத்­து­வ­மனை­களில் சேர்க்க விரும்­பு­வ­தாக தூத­ர­கம் கேட்­டுக்கொண்­டது. ஆனால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் கேரள அரசு மருத்­து­வ­ம­னை­யி­லேயே சிகிச்சை பெற விரும்­பு­வ­தாக தெரி­வித்­த­னர். குண­ம­டைந்த பின்­னர் கேரள அர­சுக்கு நன்­றி­யும் தெரி­வித்­த­னர். அந்த அள­விற்கு கேரளா திட்­ட­மிட்டு செயல்­பட்­டது," என்றார் அமைச்­சர் ஷைலஜா.