புதுடெல்லியில் நிலைமை கட்டுக்குள் தான் உள்ளது - முதல் அமைச்சர் கெஜ்ரிவால்

புதுடெல்லி: ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள போதிலும் டெல்லியில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

தற்போது அம்மாநிலத்தில் உள்ள தனிமைப்படுத்தும் மையங்களில் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் கண்காணிப்பில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் கொவிட்-19 நோய் கண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனினும் இறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை. எனவே நிலைமை கட்டுக்குள்தான் உள்ளது. கவலைப்படத் தேவையில்லை," என முதல்வர் கெஜ்ரிவால் மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக எழுப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் கெஜ்ரிவால், அம்மருத்துவமனை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!