புதுடெல்லி: இந்திய நாடெங்கும் உயிர்க்கொல்லியான கொேரானா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,45,380ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தக் கிருமித் தொற்றால் 6,535 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 146 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
கிருமியால் பாதிக்கப்பட்டுள்ள இந்த 1.45 லட்சம் மக்களில் பாதிக்கும் அதிகமானோர் நான்கு மாநிலங்களில் மட்டுமே உள்ளதாக வும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் 52,667 பேரும் தமிழ்நாட்டில் 17,082 பேரும் குஜராத்தில் 14,460 பேரும் டெல்லியில் 14,053 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை 1,45,380ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் இக்கிருமியால் பலியானோரின் எண்ணிக்கையும் 4,167ஆக அதிகரித்துள்ளது.
“அதேவேளையில் கிருமி பாதிப்பில் இருந்து 60,490 பேர் குணம் அடைந்துள்ளனர். இக்கிருமி பாதிப்பால் 80,722 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
“இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 52,667 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை அங்கு 1,695 பேர் பலியாகியுள்ள நிலையில் 15,786 பேர் குணமடைந்துள்ளனர்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் புதிதாக 100 பேருக்கு தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 2,282 ஆகவும் ராஜஸ்தானில் மேலும் 176 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாகவும் மாநில சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, வெளிநாடுகளில் சிக்கித் தவித்து வரும் இந்திய நாட்டினரைத் தாயகத்திற்கு அழைத்து வருவதற்காக மத்திய அரசு ‘வந்தே பாரத் மிஷன்’ என்ற திட்டத்தை அண்மையில் தொடங்கி யது. இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டமாக வளைகுடா நாடுகளில் இருந்து சுமார் 140 விமானங்களில் 23,000க்கும் அதிகமான மக்கள் இந்தியாவுக்குத் திரும்ப உள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்காவில் சிக்கித் தவித்து வந்த 300க்கும் மேலான இந்தியர்கள் நியூயார்க்கில் இருந்து சிறப்பு ஏர் இந்தியா விமானத்தில் நேற்று இந்தியா திரும்பினர்.