ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பயிர் களை நாசம் செய்யும் வெட்டுக்கிளிகளைத் துடைத்தொழிக்க ஆளில்லா விமானங்களை இம்மாநில வேளாண்மைத் துறை பயன்படுத்தி வருகிறது.
அங்குள்ள சோமு மாவட்டத்தின் சமோத் பகுதியில் நேற்று முதன் முதலாக இந்த ஆளில்லா விமானங்கள் மூலம் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டன.
மத்திய வேளாண் அமைச்சகம் வழங்கியுள்ள முதல் தொகுதி ஆளில்லா விமானங்கள் மாநில வேளாண்மைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.
ஜெய்ப்பூரின் சோமு தெஹ்ஸில் உள்ள சமோத் கிராமத்தில் புதன் கிழமை காலை இந்த விமானத்தின் செயல்பாடுகள் தொடங்கின.
இந்த ஆளில்லா விமானங்கள் 10 லிட்டர் ரசாயனங்களைத் தெளிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. அதோடு பயங்கர சத்தம் எழுப்பி வெட்டுக்கிளிகளை வெவ்வேறு பகுதிகளுக்கும் சிதறடிக்கச் செய் யும் சக்தி கொண்டவை என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து மாநில வேளாண் மைத்துறை ஆணையர் ஓம் பிர காஷ் கூறுகையில், “வெட்டுக்கிளி களை அழிக்க வாடகை ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தும் நிலையில், அவற்றின் எண்ணிக் கையை அதிகரிப்போம்.
“வாகனங்கள் செல்லமுடியாத பகுதிகள், கரடுமுரடான பாதைகள், உயரமான பகுதிகளில் இந்த ஆளில்லா விமானங்கள் சிறந்த பலனளிக்கும். ஒரு ஆளில்லா விமானம் 15 நிமிடத்தில் கிட்டத்தட்ட 2.5 ஏக்கர் பரப்பளவில் பூச்சிக்கொல்லியை தெளித்துவிடும்,” என்று தெரிவித்தார்.
வெட்டுக்கிளிகளை அழிக்கும் நோக்கத்திற்காக மேலும் 30 ஆளில்லா விமானங்களை விரைவில் பயன்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவிவசாயத் துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள பாதிக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாகப் படையெடுத்துள்ளன. இதனால் பயிர்கள் நாசமடைவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இந்நிலையில், ராஜஸ்தானில் இருந்து மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரம், சத்தீஸ்கர் மாநிலங்களுக்கும் ஓரிரு நாட்களில் இந்த வெட்டுக்கிளி கள் படையெடுக்க வாய்ப்புள்ளதால் இம்மாநிலங்களின் விவசாயிகளும் அதிகாரிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.