புதுடெல்லி: டெல்லியில் இருந்து மாஸ்கோ புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம் நேற்று பாதியிலேயே புதுடெல்லிக்குத் திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்த விமானத்தின் விமானிகளில் ஒருவருக்கு கொரோனா கிருமித்தொற்று இருந்ததே இதற்கான காரணம் என்று அதிகாரிகள் கூறியதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன. மேல் விவரங்கள் கிடைக்கவில்லை.
இதனிடையே, மத்தியப்பிரதேசத்தில் கொரோனா தொற்று காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டு உள்ள இந்தூர் நகரில் பொதுமக்கள் வெளியே செல்லும் போது கைக்குட்டைகள், துண்டுகளை முகக்கவசங்களாகப் பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அந்தத் தடை அகற்றப்படுவதாகவும் மக்கள் துண்டு, கைக்குட்டைகள் முதலான பல வகை முகக்கவசங்களையும் இப்போது பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.