லண்டன்: பிரிட்டனில் வசிக்கும் விஜயகுமார் கிருஷ்ணசாமி, 32, சந்திரசேகர் நல்லையன், 44, என்ற இந்திய வம்சாவளி ஆடவர்களுக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது.
இவர்கள் இணையத்தில் மோசடி கணக்குகளைத் திறந்து உலகம் முழுவதும் மொத்தம் 24 நிறுவனங்களை ஏமாற்றி 2.4 மில்லியன் பவுண்டு பணத்தை மோசடி செய்து இருக்கிறார்கள் என்று விசாரணையில் கூறப்பட்டது.
அதோடு இதர வகை தில்லுமுல்லு காரியங்களிலும் கள்ளப்பண விவகாரங்களிலும் இவர்களுக்குத் தொடர்பு உண்டு என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.