வெளி மாநிலக் குடியேறிகளைப் புண்படுத்திய ரயில் அதிகாரி இடைநீக்கம்

சிறப்பு ரயிலின் பெட்டி ஒன்றுக்குள் அமர்ந்திருந்த வெளி மாநிலக் குடியேறிகள் மீது பிஸ்கெட்டுகளை மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் வீசியதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு உத்தரப் பிரதேசத்தின் பிரோசபாத் நகரிலுள்ள ரயில் நிலையம் ஒன்றில் இந்தச் சம்பவம் நடந்ததாக இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

ரயில் அதிகாரிகள் பயணிகளுக்கு பிஸ்கெட்டுப் பொட்டலங்களை வழங்கிக்கொண்டிருந்தபோது டி. கே .டிக்சிட் என்ற அந்த அதிகாரி, புண்படும் வார்த்தைகளால் வெளி மாநிலத்து பயணிகளைக் கேலி செய்ததாக அக்காணொளி காட்டுகிறது.

"இந்த ஊழியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனர்,' என்று இந்திய ரயில்வே அமைப்பு டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் தேசியநிலை ஊரடங்களால் வீடு திரும்ப முடியாமல் தவிக்கும் வெளி மாநில ஊழியர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்புவதற்காக இந்தச் சிறப்பு ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!