புதுடெல்லி: பின்லாந்துக்கான இந்தியத் தூதராக ரவீஷ்குமாரை நியமித்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை இணைச்செயலாளராகப் பணியாற்றும் இவர், வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளராக ரவீஷ் குமார் பணியாற்றி உள்ளார்.
பின்லாந்தில் கிட்டத்தட்ட 35 இந்திய நிறுவனங்கள் பல துறைகளில் முதலீடு செய்துள்ளன. அதேபோல் 100க்கு மேற்பட்ட பின்லாந்து நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன. வெளியுறவுத் துறையில் 25 ஆண்டுகால அனுபவம் பெற்ற இவர், இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவை மேலும் மேம்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.