கேரளாவில் கர்ப்பிணி யானை அன்னாசிக்குள் பட்டாசு வைத்து கொல்லப் பட்ட சம்பவத்தின் தொடர்பில் இதுவரை இருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
பாலக்காடு மாவட்டத்தில் உணவுக்காக கிராமத்திற்குச் சென்ற யானைக்கு சிலர் வெடிபொருள் நிறைந்த பழத்தைக் கொடுத்தனர். பட்டாசு வெடித்த பிறகு யானையின் வாய்ப்பகுதி காயமடைந்த நிலையில் அந்த யானை வலி தாங்க முடியாமல் தண்ணீருக்குள் இறங்கி நின்று பிறகு உயிரிழந்தது.
சம்பவத்தின் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் அடையாளப்படுத்தப் பட்டுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் அறிவித்ததை அடுத்து இந்த கைது செய்யப்பட்டுள்ளது. கைதானமுதல் நபர் நாற்பது வயது மதிக்கத்தக்கவர் என்றும் யானையைத் தாக்கிய வெடிப்பொருட்களை சம்பவ இடத்திற்குக் கொண்டுவந்தது இவர்தான் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து பிரபலங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் தங்களது வேதனைகளை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.