நோயாளிக்கு மருத்துவர்கள் பாலியல் கொடுமை; கைது

1 mins read

லக்னோ: உத்­த­ரப் பிர­தேச மாநி­லத்­தில் லக்னோ நக­ரில் மருத்­துவ சிகிச்­சைக்குக் குடும்­பத்­தா­ரு­டன் சென்ற 25 வயது மாது ஒரு­வரை மருந்­த­கத்­தில் இருந்த இரண்டு மருத்­து­வர்­கள் பாலி­யல் ரீதி­யில் கொ­டு­மைப்­ப­டுத்­தி­விட்­ட­தாக போலி­சார் தெரி­வித்­தனர்.

அப்­போது குடும்­பத்­தி­னர் மருந்­த­கத்­துக்கு வெளியே இருந்­த­தா­க­வும் அவர்­கள் கூறி­னர்.

சிகிச்சை முடிந்து வீட்­டுக்­குச் சென்­ற­தும் தனக்கு நேர்ந்த கதி பற்றி அந்த மாது குடும்­பத்­தா­ரி­டம் விளக்கிக் கூறினார்.

உடனே அவர்­கள் மருத்­து­வ­மனைக்கு விரைந்து சென்று இரண்டு மருத்­து­வர்­க­ளை­யும் தாக்­கி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது. பிறகு குடும்­பத்­தி­னர் போசி­லி­டம் புகார் தெரி­வித்­த­னர்.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் அசோக் என்ற மருத்­து­வர் கைதா­னார். மற்­றொ­ரு­வர் தலைமறை­வாகி­விட்­டார். வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இம்சம்பவம் தொடர்பில் இரு­வர் மீதும் வழக்­குப் பதி­யப்­பட்­டுள்­ள­தா­க­ போலிஸ் கூறியது.