கூரை மீதேறி அமர்ந்து படித்த மாணவிக்கு பாராட்டு

கூரை மீதேறி அமர்ந்து படித்த மாணவிக்கு பாராட்டு

1 mins read

திரு­வ­னந்­த­பு­ரம்: கேர­ளா­வின் மலப்­பு­ரம் மாவட்­டத்­தைச் சேர்ந்­த­வர் நமீதா நாரா­ய­ணன். இவர் கல்­லூ­ரி­யில் முத­லாம் ஆண்டு படித்து வரு­கி­றார்.

கடந்த திங்­கட்­கி­ழமை முதல் கேர­ளக் கல்­லூ­ரி­களில் இணை­யம் வழி நடத்­தப்­படும் வகுப்­பு­கள் தொடங்­கி­யுள்­ளன. ஆனால், நமீ­தா­வின் வீட்­டில் உள்ள இணைய இணைப்­பின் வேகம் போது­மா­ன­தாக இல்லை.

மேலும், இணைப்­பில் உள்ள கோளாறு கார­ண­மாக 'சிக்­னல்' சரி­யாக வர­வில்லை. தன் வீட்­டைச் சுற்றி பல இடங்­களில் நின்று சோதித்­துப் பார்த்­தும் இணைய இணைப்பு சீர­டை­யா­த­தால் சரி­வ­ரப் படிக்க முடி­யா­மல் அவ­தி­யுற்­றார்.

வேறுவழி­யின்றி வீட்­டுக் கூரை­யின் மீதேறி நின்­ற­போது இணைப்பு வேக­மாக இருந்­துள்­ளது. இதை­ய­டுத்து கொஞ்­ச­மும் தயங்­கா­மல் தின­மும் வீட்­டுக் கூரை மீதேறி அமர்ந்து இணைய வகுப்­பில் பங்­கேற்றார் நமீதா. சம்­பந்­தப்­பட்ட தனி­யார் நிறு­வ­னத்­துக்­குத் தெரி­ய­வந்­த­போது நமீ­தா­வின் வீட்­டுக்கே வந்து இணைய இணைப்பை சரி செய்தது அந்நிறுவனம்.