'விலங்குகளைவிட மோசமாக நடத்தப்படும் நோயாளிகள்'

'விலங்குகளைவிட மோசமாக நடத்தப்படும் நோயாளிகள்'

1 mins read
d989d7e9-ca7f-41a9-8e14-28aa9c0e79a8
புதுடெல்லியில் நிரம்பி வழியும் பஞ்சாபி பாக் தகனச் சாலையில் கொவிட்-19க்கு பலியான ஒருவரின் உடலை எரித்துவிட்டு வரும் சுகாதாரப் பராமரிப்புத் துறை ஊழியர்கள். படம்: இந்திய ஊடகம் -

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கொரோனா கிரு­மித்­தொற்று கிடு­கி­டு­வென உயர்­வ­தால் மருத்­து­வ­மனை­களில் இடம் இல்­லாத நிலை ஏற்­பட்டு இருக்­கிறது. சவக்கிடங்கு களில் உடல்கள் குவிகின்றன.

இந்நிலையில், விலங்குகளை விட மோச­மாக நோயா­ளி­கள் நடத்­தப்­ப­டு­கி­றார்­கள் என்­றும் பலி­யா­ன­வர்­க­ளின் உடல்­கள் கையா­ளப்­படும் விதம் கொடூ­ரத்­தின் உச்­ச­மாக இருக்­கிறது என்­றும் உச்ச நீதி­மன்­றம் கவலை தெரி­வித்து கண்­டித்துள்ளது.

மாநில அர­சும் மத்­திய அர­சும் உட­ன­டி­யாக இந்த விவ­கா­ரத்­தில் கவ­னம் செலுத்தி தேவை­யான வற்றை உறு­திப்­ப­டுத்த வேண்­டும் என்று உத்­த­ர­விட்டு உள்­ளது.

கொரோ­னா­வுக்கு பலி­யா­ன­வர்­க­ளின் உடல்­கள் மனி­தா­பி­மா­ன­மற்ற முறை­களில் கையாளப்­படு­வ­தைக் காட்­டும் பல காணொ­ளி­கள் அண்­மைய நாட்­களில் இணை­யத்­தில் வலம் வரு­கின்­றன.

இந்த விவ­கா­ரம் தொடர்­பில் தானே முன்­வந்து வழக்­குப் பதிந்து நீதி­மன்­றம் இந்த உத்­த­ர­வைப் பிறப்­பித்து உள்­ளது.

உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தில் பல்­ராம்­பூர் மாவட்­டம் உத்­ரா­வுலா நக­ரில் உள்ள ஓர் அரசு அலு­வ­ல­கத்­தின் முன் திடீ­ரென விழுந்து உயி­ரிழந்த ஒரு­வ­ரின் உடலை குப்பை வண்­டி­யில் எடுத்­துச் சென்ற விவ­காரம் தொடர்­பில் விளக்­கம் அளிக்­கு­மாறு கேட்டு அந்த மாநி­லத்­திற்கு உச்ச நீதி­மன்­ற­மும் சிறு­பான்­மை­யி­னர் நல ஆணை­ய­மும் கடி­தம் அனுப்பி இருக்­கின்­றன.