மத்திய அரசு: கொரோனா ஒழிப்பில் சைக்கிள் நல்ல ஆயுதம்

மத்திய அரசு: கொரோனா ஒழிப்பில் சைக்கிள் நல்ல ஆயுதம்

1 mins read
3f63042d-ded3-46c4-b3c0-97536689e978
கொரோனா கிருமித்தொற்று சூழலில் பேருந்து, ரயில் போன்ற பொதுப் போக்குவரத்தைத் தவிர்த்துக்கொண்டு சைக்கிள்களைப் பயன்படுத்த ஊக்கமூட்டும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஆலோசனை கூறி இருக்கிறது. படம்: இந்திய ஊடகம் -

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கொரோனா கிரு­மித்­தொற்று கிடு­கி­டு­வென பெருகி வரும் நிலை­யில், பொதுப் போக்­கு­வ­ரத்­து­களைத் தவிர்த்­துக்­கொண்டு சைக்­கிள்­க­ளைப் பயன்­ப­டுத்­தும்­படி மக்­க­ளுக்கு மாநில நிர்­வா­கங்­கள் ஊக்க­மூட்ட வேண்­டும் என்று மத்­திய அரசு வேண்­டு­கோள் விடுத்துள்ளது.

இதற்­கான வழி­வ­கை­களை ஆரா­யும்­படி மத்­திய வீட­மைப்பு நகர மேம்­பாட்­டுத் துறை அமைச்சு மாநி­லங்­க­ளைக் கேட்­டுக்­கொண்டு இருக்­கிறது.

பய­ணத்­திற்குச் சைக்­கிள் பாது­காப்­பான சாத­னம் என்று உல­கம் முழு­வ­தும் கரு­தப்­ப­டு­வதை அமைச்சு சுட்­டிக்­காட்டி இருக்­கிறது.

கொவிட்-19 காலத்­தில் கூட்­ட­மா­கச் செல்­லா­மல் தனி­யாக பய­ணம் செய்­யவே பெரும்­பா­லான மக்­கள் விரும்­பு­கி­றார்­கள்.

பேருந்து, ரயில்­களில் கூட்­ட­மாகச் செல்­லும்­போது கிருமி பரவும் ஆபத்து அதி­கம். இத­னால் சைக்கிள் போன்ற சாத­னங்­க­ளைப் பயன்­ப­டுத்­தி­னால் கிருமி பர­வு­வ­தைத் தவிர்க்­க­லாம் என்று மத்­திய அரசு குறிப்­பிட்டு உள்­ளது.

தவிர்க்க முடி­யாத சூழ்­நி­லை­யில் ரயில், பேருந்­து­களில் சென்றால் ரொக்­க­மற்ற முறை­களில் கட்­ட­ணத்­தைச் செலுத்த ஏற்­பா­டு­கள் இருக்க வேண்­டும் என்று அமைச்சு வலி­யு­றுத்­திக் கூறி இருக்­கிறது.

சைக்­கிள்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வ­தால் செலவு குறை­வ­தோடு உடல்­நலத்­திற்­கும் நல்­லது, அதைப் பயன்­ப­டுத்­து­வ­தும் எளிது, சுற்­றுச்­சூ­ழ­லுக்­கும் பாதிப்பு வராது, கிரு­மிப் பர­வு­வ­தை­யும் தடுத்­து­வி­ட­லாம் என்று மத்­திய வீட­மைப்பு நகர மேம்­பாட்­டுத் துறை அமைச்சு தெரி­வித்து உள்­ளது.