பெங்களூரு: கர்நாடகத்தில் கொரோனா கிருமித்தொற்று குறைவாக இருந்தாலும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
அங்கு வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 7 பேர் மரணம் அடைந்ததால் மொத்த எண்ணிக்கை 81 ஆகியது. கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 6,442 ஆக உயர்ந்துள்ளது. 3,440 பேர் குணம் அடைந்து உள்ளனர். 2,995 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

