சென்னையில் கிருமித்தொற்று கண்ட 97 வயது முதியவர் குணமடைந்து வீடு திரும்பினார்

கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த 97 வயது முதியவர் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த மே மாதம் 30ஆம் தேதி 97 வயது முதியவர் ஒருவர், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட தீவிர உடல்நலப் பிரச்சினைகளுடன் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவர் உயர் ரத்த அழுத்தம், இருதயப் பிரச்சினை உள்ளிட்டவற்றால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்ததைத் தொடர்ந்து அவர் தொற்றிலிருந்து விடுபட்டு குணமடைந்தார்.

கிருமித்தொற்றிலிருந்து விடுபட்ட அவர், நேற்று முன்தினம் (ஜூன் 12) மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவப் பணியாளர்கள் கைகளைத் தட்டி அவரை உற்சாகத்துடன் வழியனுப்பி வைத்தனர்.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!