சென்னை: தமிழகத்தில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
இந்நிலையில் நவம்பர் மாத மத்தியில் தமிழகத்தில் கொரோனா கிருமித்தொற்று பாதிப்பு உச்சமடையும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றம் எச்சரித்துள்ளது.
கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கொவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் நோய்த்தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 38 பேர் கொவிட்-19 நோய்க்கு பலியாகி உள்ளனர். இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் சென்னையில் மட்டும் 32 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அடுத்த சில வாரங்களில் கொரோனா கிருமித்தொற்றுப் பரவல் உச்சக்கட்டத்தை அடையும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, தமிழகத்தில் நவம்பர் மாதம் தொற்றுப் பரவல் உச்சம் பெறும் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.
எனவே அரசுத் தரப்பில் மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சியினரும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

