மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்து கொள்ள வில்லை, கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அவரது மாமா பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருந்த வேளையில் பிரேத பரிசோதனை முதற்கட்ட முடிவு நேற்று வெளியானது. கொலைக்கான தடயம் இல்லை என்றும் தற்கொலைதான் செய்துகொண்டார் என்றம் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்து பலரின் மனதில் இடம் பிடித்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத், 34, (படம்). யாரும் எதிர்பார்க்காத நிலையில் அவரது வீட்டில் நேற்று முன்தினம் அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டார் என்று தகவல்கள் பரவின. அவரது தாய்வழி மாமா, "சுஷாந்த் தற்கொலை செய்ய வாய்ப்பே இல்லை. அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது. அதில் சதி இருக்கலாம்," என்று கூறினார். அதனால் ஏற் பட்ட பரபரப்பு பிரேத பரிசோதனை முடிவு வெளியானதும் அடங்கி விட்டது.
இருப்பினும் போலிஸ் விசா ரணை தொடருகிறது. சுஷாந்தின் இறுதி கைபேசி அழைப்புகளை அவர்கள் ஆராய்ந்தனர்.
காதலி என்று சொல்லப்படும் நடிகை சுஷாந்தின் அழைப்புகளை ஏற்கா ததும் போலிசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே அந்த நடிகையையும் சுஷாந்தின் நண்பர் கள் சிலரையும் விசாரிக்க போலிஸ் முடிவு செய்து உள்ளது.

