'கொரோனா தேவி'க்கு தினமும் வழிபாடு

'கொரோனா தேவி'க்கு தினமும் வழிபாடு

1 mins read
baae8b02-3ae3-4d7c-99dd-11bb33d41570
தமது வீட்டுக்கு வந்து 'கொரோனா தேவி'யை வழிபடு மாறு யாரையும் அழைக்கவில்லை என்று கூறும் அனிலன் நம்பூதிரி, தினமும் மந்திரம் ஓதி பூஜை செய்துவருகிறார். படம்: இந்திய ஊடகம் -

கொல்­லம்: கேரள மாநி­லம் கொல்­லம் கடைக்­கல் பகு­தி­யைச் சேர்ந்த அனி­லன் நம்­பூ­திரி என்­ப­வர் தனது வீட்­டின் முதல் தளத்­தில் உள்ள பூஜை அறை­யில் கொரோனா பிம்­பத்தை வைத்து 'தின­மும் பூஜை செய்து வழி­பாடு செய்து வரு­கி­றார். "ஓம் கொரோனா தேவியே, லோகா சமஸ்தா சுகினோ பவந்து..." என பூஜை­யின்­போது மந்­தி­ரம் சொல்லி கொரோனா உரு­வத்தை ஆரா­திக்­கி­றார்.

சமூக ஊட­கங்­களில் இச்­செய்தி பர­வி­ய­தும் 'இது முட்­டாள்­த­ன­மான வழி­பாடு' என சிலர் கடு­மை­யாக விமர்­சித்தனர். விளம்­ப­ரத்­துக்­காக அவர் இவ்­வாறு செய்­கி­றார் என்­றும் கருத்து பர­வி­யது.

ஆனால் இவற்­றை­யெல்­லாம் காதில் போட்­டுக்­கொள்­ளாத அகி­லன், "கிருமி நோய்­களை கட­வு­ளாகக் கருதும் வழக்கம் இந்­தி­யா­வில் உண்டு. 'சிக்­கன் பாக்ஸை' அம்மை நோய் என­வும் அம்மை போட்­டி­ருக்­கிறது என­வும் தமிழ்­நாட்­டில் கூறு­கி­றார்­கள். அம்­ம­னுக்­குக் கோபம் வந்­தால் அது­போன்ற நோய் வரும் என்­றும் கூறு­வார்­கள்.

"கொரோனா தேவியை வழி­பட வேண்­டும் என நான் யாரை­யும் அழைக்­க­வில்லை. என் வீட்­டில் நான் வழி­ப­டு­வது எனது தனிப்­பட்ட நம்­பிக்கை. இங்கு வழி­பாடு செய்ய வரு­ப­வர்­கள் காணிக்கை வழங்க வேண்­டும் என­வும் நான் கேட்­க­வில்லை. எனது வரு­மா­னத்­துக்­காக காய்­கறி வியா­பா­ரம் செய்து வரு­கி­றேன்," என்று தம்மை வந்து சந்­தித்த செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரிவித்தார்.

கொரோ­னா­ நோயா­ளி­கள் குண­ம­டைவதற்காகவும் முன்­க­ளத்­தில் நின்று போரா­டும் மருத்­து­வத் துறை, காவல்­துறை, துப்­பு­ர­வுத் துறை ஊழி­யர்­க­ளின் நல­னுக்­கா­க­ 'கொரோனா தேவி'யை பிரார்த்­திப்­ப­தா­க­வும் அவர் கூறினார்.