மிசோரம்: மிசோரம் மாநிலத்தில் விளையாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர் ராபர்ட் (படம்). அங்குள்ள ஐஸ்வால் நகரில் உள்ள சிட்வெங் பகுதியில் வசித்து வருகிறார்.
இவரது பக்கத்து வீட்டுக் காரரான லாங் சில்லோவா என்பவர் தனது இடிந்துபோன வீட்டைப் புதுப்பித்துக் கட்டி வருகிறார். மாடிக்கு பெரிய பெரிய பாறாங்கற்களைக் கொண்டு சென்றால் கட்டடப் பணிகள் ஓரளவு முடிந்துவிடும்.
ஊரடங்கு உத்தரவால் போதுமான அளவில் கட்டுமான ஊழியர்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில் இந்த தகவல் கேள்விப்பட்ட அமைச்சர் ராபர்ட், 50 மீட்டர் தொலைவில் கொட்டப்பட்டிருந்த கற்களை தன் தோளில் சுமந்து சென்று, கட்டுமானப் பணிகள் நடக்கும் மாடிக்குக் கொண்டுபோய் சேர்த்துள்ளார்.
ஒருநாள் முழுவதும் கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்துள்ளார் அமைச்சர் ராபர்ட்.
மிகச்சிறந்த காற்பந்து வீரரான ராபர்ட், கற்களை அனாயாசமாகத் தோளில் சுமந்து சென்றதை அங்குள்ள யாரும் ஆச்சரியமாகப் பார்க்கவில்லை.
பெரும் சிரத்தை எடுத்து அமைச்சர் ராபர்ட் கல் சுமந்து வந்தது பக்கத்து வீட்டுக்காரரை நெகிழவைத்துள்ளது.

