மாநில முதல்வர்களுடன் இன்றும் நாளையும் பிரதமர் ஆலோசனை

மாநில முதல்வர்களுடன் இன்றும் நாளையும் பிரதமர் ஆலோசனை

2 mins read
ca3d4da5-3081-4ca6-8541-bf440296e586
-

புது­டெல்லி: நாடெங்­கும் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றின் தாக்­கம் வேக­மா­கப் பரவி வரு­கிறது. உலக அள­வில் இக்­கி­ரு­மித் தொற்­றால் அதி­கம் பாதிக்­கப்­பட்­டுள்ள நாடு­க­ளின் பட்­டி­ய­லில் இந்­தியா 4வது இடத்­தில் உள்­ளது.

இந்­நி­லை­யில், இந்த நோய்த்­தொற்று பர­வ­லை­யும் இறப்பு விகி­தத்­தை­யும் தடுப்­ப­தற்­கான வழி­முறை­கள் குறித்து அனைத்து மாநி­லங்­க­ளை­யும் சேர்ந்த முதல்­வர்­க­ளு­டன் காணொளி வழி பிர­த­மர் மோடி இன்­றும் நாளை­யும் ஆலோ­சனை நடத்­த­வுள்­ளார்.

கடை­சி­யாக மே 11ஆம் தேதி முதல்­வர்­க­ளு­டன் ஆலோ­ச­னை­யில் ஈடு­பட்­டார் மோடி. ஊர­டங்­கில் நடை­பெ­றும் ஆறா­வது சுற்று ஆலோ­ச­னை­யா­கும் இது.

பஞ்­சாப், கேர­ளா, கோவா, உத்­த­ர­கண்ட், ஜார்க்­கண்ட் உள்­ளிட்ட 21 மாநி­லங்­கள், யூனி­யன் பிர­தே­சங்­க­ளின் முதல்­வர்­கள், துணை­நிலை ஆளு­நர்­கள், நிர்­வாக அதி­கா­ரி­கள் ஆகி­யோ­ரு­டன் பிர­த­மர் மோடி நேற்று ஆலோ­சித்­தார்.

தமி­ழ­கம், மகா­ராஷ்­டி­ரம், மேற்கு வங்­கம், டெல்லி, கர்­நா­ட­கம், குஜ­ராத், பீகார், உத்­த­ரப்­பி­ர­தே­சம் உள்­ளிட்ட 15 மாநி­லங்­க­ளின் முதல்வர்­க­ளு­டன் இன்று புதன்­கி­ழமை அவர் தனித்­த­னி­யாக ஆலோ­சனை நடத்த உள்­ளார்.

இதற்­கிை­டயே, காங்­கி­ரஸ் எம்பி ராகுல் காந்தி மத்­திய அரசை 'அறி­யா­மை­யை­விட மிக ஆபத்­தா­னது ஆண­வம் என்­கிற ஒரே ஒரு விஷ­யம்­தான்' என்று ஆல்­பர்ட் ஐன்ஸ்­டீன் கூறிய கருத்தை மேற்­கோள்­காட்டி விமர்­சித்­துள்­ளார்.

"தவ­றான பந்­த­யத்­தில் வெற்றி பெற இந்­தியா வேக­மாக சென்று கொண்­டி­ருக்­கிறது. போதிய திற­னற்ற அர­சால் இப்­ப­டி­யொரு விஷ­யம் நடந்­துள்­ளது," எனக் குறிப்­பிட்­டுள்­ளார்.

ஊர­டங்கு உத்­த­ரவு போடப்­பட்­ட­த­னால்­தான் இந்­தி­யா­வில் கொரோனா தொற்­றுப் பர­வல் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டது என்று மத்திய அரசு தொடர்ந்து கூறி வரு­கிறது.

ஆனால் ராகுல், ஊர­டங்கு சம­யங்­களில் கொரோனா தொற்று எப்படி படிப்­ப­டி­யாக உயர்ந்­தது என்­றும் அதே­நே­ரத்­தில் இந்­தி­யப் பொரு­ளா­தா­ரம் எப்படி படிப்­ப­டி­யாக சரிந்­தது என்­றும் புதிதாக வெளியிட்டுள்ள காணொளியில் விவ­ரித்­துள்­ளார்.