புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 52%க்கு மேல் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு செவ்வாய்க் கிழமை வரை ஒரு லட்சத்து 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குணமடைந்து வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
"கடந்த மூன்று நாட்களாக 52.46%க்கும் அதிகமான மீட்சி விகிதத்தை இந்தியா பெற்றுள்ளதாகவும் திங்களன்று மீட்பு விகிதம் 51%க்கும் அதிகமாக இருந்ததாகவும் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 797 நோயாளிகள் கொடிய தொற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்," என்றும் சுகாதாரத்துறை விவரம் வெளியிட்டுள்ளது.புதிய

