மும்பை: கொரோனா கிருமித்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
அங்கு ஒரே நாளில் புதிதாக 2,701 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,537ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,13,445 ஆக அதிகரித்துள்ள நிலையில், இதுவரை 57,851 பேர் குணமடைந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் டெல்லியில் புதிதாக 1,859 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கு பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 45 ஆயிரத்தை நெருங்கி உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை நேற்று தெரிவித்துள்ளது.

