புதுச்சேரியின் சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியில் வசிக்கும் விக்னேஷ், தனியார் வங்கி ஒன்றில் வேலைக்குச் சேர்வதற்காக தடையில்லா சான்றிதழ் கோரி அவரது பகுதியில் உள்ள லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் விண்ணப்பித்தார்.
தடையில்லா சான்றிதழ் பெற வேண்டுமாயின் தேசிய கீதத்தைப் பாடவேண்டும் என்று விக்னேஷிடம் அந்த காவல் நிலையத்தின் ஆய்வாளர் கேட்டுக்கொண்டார்.
ஆனால், அந்த இளைஞரால் தேசிய கீதத்தை முழுமையாகப் பாட முடியவில்லை. அதனையடுத்து, தேசிய கீதத்தை முழுமையாகப் பாடினால் மட்டுமே தடையில்லா சான்றிதழ் வழங்கப்படும் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார் ஆய்வாளர்.
மறுநாள் காவல்நிலையத்துக்குச் சென்ற விக்னேஷ், தேசிய கீதத்தை முழுமையாகப் பாடியதையடுத்து, அவர்மீது எந்த வழக்கும் இல்லை என்பதைக் குறிப்பிடும் ‘தடையில்லா சான்றிதழ்’ வழங்கப்பட்டது.
இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டனர்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online