புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சொந்த மாவட்டத்திலேயே பணி

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சொந்த மாவட்டத்திலேயே பணி

1 mins read
5d041a27-8a2a-483d-bc87-4984d9247b34
-

புது­டெல்லி: நாடு முழு­வ­தும் 116 மாவட்­டங்­க­ளுக்கு அதிக அள­வில் புலம்­பெ­யர் தொழி­லா­ளர்­கள் திரும்பி இருப்­ப­தாக மத்­திய நிதி­ய­மைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன் தெரி­வித்­துள்­ளார்.

டெல்­லி­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், ஊர் திரும்­பிய தொழி­லா­ளர்­க­ளுக்கு ஊரக வேலை­வாய்ப்­புத் திட்­டத்­தின் கீழ் பணி வழங்­கப்படுவதாகக் குறிப்­பிட்­டார்.

தொழி­லா­ளர்­க­ளின் திறன்­களை கண்­டு அறிந்து 25 வகை­யான பணி­களை வழங்க திட்­டம் உரு­வாக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­க­வும், இதற்கு 50 ஆயி­ரம் கோடி ரூபாய் ஒதுக்­கப்­படும் என்­றும் அமைச்­சர் தெரி­வித்­தார்.

"இந்­தத் திட்­டத்தை பிர­த­மர் மோடி விரை­வில் தொடங்கி வைப்­பார். அடுத்த நான்கு மாதங்­களில் தொழி­லா­ளர்­க­ளின் திறனைக் கண்­ட­றிந்து, அவர்­க­ளது மாவட்­டங்­க­ளி­லேயே பல்­வேறு தொழில்­கள் தொடங்­கப்­படும். கிணறு தோண்­டு­தல், பண்ணை கட்­டு­மா­னம், சாலை அமைத்­தல், பஞ்­சா­யத்­து­களில் கட்­ட­டம் கட்­டும் வேலை­கள் வழங்­கப்­படும்," என்­றும் நிர்­மலா சீதா­ரா­மன் மேலும் தெரி­வித்­தார்.