'தயார்நிலையில் இந்திய விமானப் படை'

'தயார்நிலையில் இந்திய விமானப் படை'

2 mins read
39e451c0-5bff-4550-9657-ff2f05aec0d9
ஹைதராபாத்தில் நேற்று உரையாற்றிய விமானப் படைத் தளபதி ஆர்கேஎஸ் பதாரியா. படம்: ஏஎஃப்பி -

அமைதிக்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதாக படைத் தளபதி தகவல்

ஹைத­ரா­பாத்: இந்­திய எல்­லைப் பகு­தி­யில் எந்­த­வொரு தாக்­கு­த­லுக்­கும் பதி­லடி தரும் வகை­யில் விமா­னப்­படை தயா­ராக உள்­ள­தென இந்­திய விமா­னப்­படை தள­பதி பதா­ரியா கூறி உள்­ளார்.

இந்­திய-சீன எல்­லைப் பகு­தி­யான லடாக்­கில் உள்ள கல்­வான் பள்­ளத்­தாக்­கில் இரு நாட்டு ராணு­வத்­தி­ன­ருக்­கும் இடையே கடந்த திங்­கட்­கி­ழமை இரவு கடும் மோதல் நடை­பெற்­றது.

இதில் 20 இந்­திய வீரர்­கள் வீர மர­ண­ம­டைந்­த­னர். மேலும் 76 பேர் காய­முற்­ற­னர். இத­னால் மீண்­டும் எல்­லை­யில் பதற்­றம் நிலவி வரு­வ­தோடு இரு நாட்டு ராணு­வ­மும் எல்­லை­யில் படை­களைக் குவித்து வரு­கின்­றன.

இத­னி­டையே எல்­லை­யில் உள்ள சூழலை சமா­ளிக்க இந்­திய போர் விமா­னங்­களும் எல்­லையை நோக்கி நகர்த்­தப்­பட்டு வரு­கின்­றன.

இந்­நி­லை­யில், அமை­தியை காக்க இந்­தியா எப்­போ­தும் பாடு­படும் என­வும் கல்­வான் பள்­ளத்­தாக்­கில் இந்­திய வீரர்­கள் செய்த தியா­கம் வீண்­போ­காது என இந்­திய விமா­னப்­படை தள­பதி ஆர்கே­எஸ் பதா­ரியா தெரி­வித்­துள்­ளார்.

ஹைத­ரா­பாத்­திற்கு அரு­கி­லுள்ள விமா­னப்­படை பயிற்­சிக்­க­ழ­கத்­தில் ஒருங்­கி­ணைந்த பட்­ட­ம­ளிப்பு நிகழ் வில் கலந்­து­கொண்டு பதா­ரியா பேசு­கை­யில், "அமை­தி­யைக் காக்க இந்­தியா எப்­போ­தும் பாடு­படும். கல்­வான் பள்­ளத்­தாக்­கில் உயி­ரி­ழந்த நமது வீரர்­கள் செய்த தியா­கம் ஒரு­போ­தும் வீண்­போ­காது.

"சவா­லான சூழ்­நி­லை­யில் எடுக்­கப்­பட்ட மகத்­தான நட­வ­டிக்­கை­கள், நாட்­டின் இறை­யாண்­மையை எந்­த­வொரு விலை கொடுத்­தா­வது பாது­காப்­ப­தற்­கான எங்­கள் தீர்­மா­னத்தை நிரூ­பித்­துள்­ளன.

"எந்­த­வொரு தாக்­கு­த­லுக்­கும் பதி­லடி கொடுக்க விமா­னப்­படை தயா­ராக உள்­ளது. சூழ்­நி­லையை கருத்­தில் கொண்டு எல்லா நேரங்­க­ளி­லும் தயா­ராகவும் விழிப்­பு­ட­னும் இருக்க படை­க­ளுக்கு கட்­ட­ளை­யி­டப்­பட்டு உள்­ளது. தற்­போ­தைய நிலை­மை­யில் எல்­லைப் பிரச்­சினை அமை­தி­யாக தீர்க்­கப்­ப­டு­வதை உறுதி செய்­வ­தற்­கான அனைத்து முயற்­சி­களும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன," என்று கூறி­னார்.