கர்நாடகத்திற்குள் நுழைந்தோர் மீது போலிஸ் தடியடி

1 mins read
75439f1b-1466-4778-a2cc-303ce193f0f7
கர்நாடக மாநிலத்தின் பெங்களூரில் மகளிர் காவல்துறையினர் முகக்கவசம், கையுறையுடன் அணிவகுத்துச் செல்கின்றனர். முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்காக அவர்கள் கடந்த வியாழக்கிழமையை 'முகக்கவச தின'மாகக் கடைப்பிடித்தனர். படம்: இபிஏ -

பெங்­க­ளூரு: வெளி­மா­நி­லங்­களில் இருந்து வரு­வோ­ருக்­காக 'சேவா சிந்து' என்ற செய­லியை கர்­நா­டக அரசு அறி­மு­கம் செய்­துள்­ளது. அப்­படி வரு­வோர் மூன்று நாட்­க­ளுக்கு அரசு கண்­கா­ணிப்பு மையத்­தில் தங்க வைக்­கப்­ப­டு­வார்­கள். இந்­நி­லை­யில் ஓசூர் எல்லை பகு­தி­யான ஜூஜூ­வா­டி­யில் இருந்து கர்­நா­ட­கா­வின் எல்­லைப் பகு­திக்கு நடந்து சென்­ற­வர்­களை கர்­நா­டக போலி­சார் தடுத்து நிறுத்­தி­ தமி­ழ­கத்­திற்கே திரும்பிச் செல்லுமாறு கேட்­டுக்­கொண்­ட­னர். அப்­போது இரு­ த­ரப்­பி­ன­ருக்­கும் இடையே வாக்கு­வா­தம் மூண்டதால் அவர்­களை அப்­பு­றப்­ப­டுத்த போலி­சார் தடி­யடி நடத்­தி­னர்.